Kathir News
Begin typing your search above and press return to search.

ரத்தாகிறதா உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்... பாகிஸ்தான் திடீர் அறிவிப்பு!

ரத்தாகிறதா உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்... பாகிஸ்தான் திடீர் அறிவிப்பு!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  20 Jun 2023 2:26 AM GMT

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ரத்து ஆவதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. இதற்கு காரணம் இந்தியாவும், பாகிஸ்தானுக்கும் இடையிலான எல்லை ரீதியாக காரணம் என்று கூறப்படுகிறது. பாகிஸ்தான் அணி இந்தியாவில் வந்து விளையாட தயக்கம் காட்டி வருகிறது. இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தான் விளையாடும் போட்டிகளை வேறு எங்காவது வைத்துக் கொள்ளலாம் என்று கூறியது. இதனால் இந்தியாவுக்கு வருவது குறித்து உறுதி அளிக்குமாறு BCC கூறி இருந்தது.


இந்த நிலையில் இதற்கு பதிலளித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தாங்கள் இந்தியாவுக்கு வருவதும் வராததும் எங்கள் நாட்டின் அரசு கையில் இருக்கிறது என்று கூறியுள்ளது. எங்கள் நாட்டு வீரர்களின் நலனை கருத்தில் கொண்டு எங்கள் நாட்டு அரசாங்கம் இதற்கு ஒப்புக் கொள்ளாமல் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. பாகிஸ்தானில் அரசாங்கம் நிலையாக இல்லாத காரணத்தினால் முடிவுகள் மாற்றப்படலாம் என்றும் கூறப்பட்டிருக்கிறது.


இதனால் இந்தியா வந்து விளையாடுவதில் தங்களுக்கு சிக்கல் இருப்பதாகவும் உறுதியாக தற்போது வரை எதுவுமே கூற முடியாது என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. எனவே அக்டோபர் மாதங்களில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுமா என்ற ஒரு கேள்வியும் தற்போது எழுந்திருக்கிறது.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News