Kathir News
Begin typing your search above and press return to search.

பஹ்ரைனில் நடைபெற்ற சேலஞ்சர் டென்னிஸ்: ராம்குமார் சாம்பியன் பட்டம்!

இரண்டாவது செட்டில் கார்லோவ்ஸ்கி கடுமையான நெருக்கடி கொடுத்தாலும் அவரது சர்வீஸ் ஆட்டத்தை முறியடித்த ராம்குமார் 61, 64 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று கோப்பையை முத்தமிட்டார். இந்த போட்டி 1 மணி 1 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.

பஹ்ரைனில் நடைபெற்ற சேலஞ்சர் டென்னிஸ்: ராம்குமார் சாம்பியன் பட்டம்!

ThangaveluBy : Thangavelu

  |  30 Nov 2021 6:38 AM GMT

பஹ்ரைனில் நடைபெற்ற மனோமா ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கலந்து கொண்டு தமிழக வீரர் ராம்குமார் ராமநாதன் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். கடைசி போட்டியில் ரஷ்ய வீரர் எவ்கெனி கார்லோவிஸ்கியுடன் 27, நேற்று (நவம்பர் 29) மோதிய ராம்குமார் 27, முதல் செட்டை 61 என்ற கணக்கில் எளிதாக கைப்பற்றி முன்னிலை வகித்தார்.

இரண்டாவது செட்டில் கார்லோவ்ஸ்கி கடுமையான நெருக்கடி கொடுத்தாலும் அவரது சர்வீஸ் ஆட்டத்தை முறியடித்த ராம்குமார் 61, 64 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று கோப்பையை முத்தமிட்டார். இந்த போட்டி 1 மணி 1 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.

தற்போது ஏடிபி சேலஞ்சர் தொடர்களில் 7வது முறை பைனலுக்கு முன்னேறி உள்ள ராம்குமார் முதன் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Dinakaran


Next Story
கதிர் தொகுப்பு
Trending News