Kathir News
Begin typing your search above and press return to search.

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய 'பி' அணி தொடர்ந்து ஆதிக்கம்!

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய பி அணி தொடர்ந்து ஆதிக்கம்!

ThangaveluBy : Thangavelu

  |  2 Aug 2022 11:48 AM GMT

44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.

அதே போன்று இந்தியா சார்பில் 6 அணிகள் பங்கேற்று உள்ளது. ஆண்கள் பிரிவில் 3 அணியும், பெண்கள் பிரிவில் 3 அணியும் கலந்து விளையாடி வருகிறது. மேலும், ஒலிம்பியாட் போட்டியில் இந்திய 'பி' அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

அதன்படி நேற்று நடைபெற்ற 4வது சுற்று ஆட்டத்தில் இந்திய 'பி' அணி 3-1 என்ற கணக்கில் இத்தாலியை வீழ்த்தியது. இந்திய 'ஏ' அணி பிரான்சுடன் மோதிய ஆட்டம் 2-2 என்ற கணக்கில் 'டிரா' ஆனது. இந்திய 'சி' அணி 1.5-2.5 என்ற கணக்கில் ஸ்பெயினிடம் தோல்வியுற்றது. 4 சுற்றுகள் முடிவில் ஓபன் பிரிவில் இந்திய 'பி' அணி, அர்மெனியா, இஸ்ரேல், இங்கிலாந்து, ஸ்பெயின் ஆகிய 5 நாடுகள் தலா 8 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளன. ஆனால் இதில் இந்திய 'பி' அணிதான் போர்டு பாயிண்டில் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது. இதில் குகேஷ், சரின் நிகில், பிரக்ஞானந்தா, அதிபன், சத்வானி உள்ளிட்டோரை கொண்ட இந்திய 'பி' அணி 15 போர்டு பாயிண்டுகளை பெற்றிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Maalaimalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News