Kathir News
Begin typing your search above and press return to search.

டெல்லி கேப்பிடல்ஸ் தோல்வி குறித்து கேப்டன் ஷ்ரேயஸ் ஐயரின் விளக்கம்.!

டெல்லி கேப்பிடல்ஸ் தோல்வி குறித்து கேப்டன் ஷ்ரேயஸ் ஐயரின் விளக்கம்.!

டெல்லி கேப்பிடல்ஸ் தோல்வி குறித்து கேப்டன் ஷ்ரேயஸ் ஐயரின் விளக்கம்.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  22 Oct 2020 7:23 AM IST

ஐபிஎல் தொடரின் 38வது லீக் போட்டியில் டெல்லி அணி பஞ்சாப் அணியை எதிர்த்து விளையாடியது. இந்த போட்டியில் டெல்லி அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. முதலில் விளையாடிய டெல்லி அணியில் ஷிகர் தவனை தவிர்த்து மற்ற வீரர்கள் யாரும் பெரிய ஸ்கோர் எடுக்கவில்லை. தவண் சதம் வீளாசிய நிலையில் டெல்லி அணி 164 ரன்கள் குவித்தது.

ஆனால் பின்னர் விளையாடிய பஞ்சாப் அணியில் பூரணின் சிறப்பான ஆட்டத்தால் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. டெல்லி அணிக்கு இது மூன்றாவது தோல்வி ஆகும். இருப்பினும் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் இந்தப் போட்டிக்குப் பின்னர் தோல்வி குறித்து பேசிய திடீரென்று கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் கூறுகையில் : இந்த போட்டியில் நாங்கள் 10 ரன்கள் வரை குறைவாக அடித்து விட்டோம் என்று கருதுகிறேன். இந்த போட்டியில் இருந்து நாம் பல விடயங்களை கற்றுக் கொண்டுள்ளோம். தவான் சிறப்பாக பேட்டிங் செய்தார். அவர் எங்கள் அணிக்கு ஒரு பிளஸ். ஆனால் துஷார் எங்கள் அணியில் அதிக ரன்களை பவுலிங்கின் போது விட்டுக் கொடுத்தார்.

இருந்தாலும் இதுபோன்ற மோசமான செயல்களில் இருந்து மீண்டு வருவோம். இந்த மைதானத்தை தவான் நன்கு அறிந்திருந்தார். அதற்கேற்றார் போல் அவர் சுதாரித்துக் கொண்டு சிறப்பாக விளையாடினார். கடந்த இரண்டு போட்டிகளாக அவர் மிக வேகமாகவும் விளையாடி வருகிறார். அவரின் இன்னிங்ஸ் இளைஞர்களுக்கு ஒரு நல்ல பாடமாக அமைந்துள்ளது.

மேலும் இனிவரும் போட்டிகளில் அவர்களும் சிறப்பாக விளையாடுவார்கள் என்று நினைக்கிறேன். இந்த போட்டியில் மோசமான தோல்விக்கு காரணம் பவுலிங்கின் போது அதிக ரன்களை லீக் செய்தது தான் என்றும் இனிவரும் போட்டிகளில் பலமாக திரும்பி வருவோம் என்று ஐயர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News