அடுத்த ஐபிஎல் சீசனிலும் நான் விளையாடுவேன் – தோனி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி.!
அடுத்த ஐபிஎல் சீசனிலும் நான் விளையாடுவேன் – தோனி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி.!

By : Kathir Webdesk
ஐபிஎல் 2020 சீசன் சென்னை அணிக்கு மிகவும் மோசமான சீசனாக அமைந்துள்ளது. இதுவரை நடைபெற்ற அனைத்து சீசனிலும் பிளே ஆப்ஸ் சென்ற சென்னை அணி இந்த முறை லீக் போட்டிகளுடன் வெளியேறுகின்றது. இந்நிலையில் நேற்று பஞ்சாப் அணிக்கு எதிராக நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் வெற்றி பெற்று ஹாட் ரிக் வெற்றியை பதிவு செய்தது.
இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய சென்னை அணியின் கேப்டன் தோனி கூறுகையில் : நாங்கள் இந்த தொடரில் முழு திறனுடன் விளையாடவில்லை. இந்த தொடர் முழுவதுமே நாங்கள் நிறைய தவறுகளைச் செய்து உள்ளோம். ஆனால் கடைசியாக நடைபெற்ற நான்கு போட்டிகளில் நாங்கள் எவ்வாறு விளையாட வேண்டும் என்பதை புரிந்து அதனை வெளிப்படுத்தினோம். எங்கள் அணியில் உள்ள வீரர்கள் ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பை அளிக்க வேண்டும்.
அந்த வகையில் கடந்த 4 போட்டிகளாக நாங்கள் விளையாடிய கிரிக்கெட் திருப்தி அளிக்கிறது. இருப்பினும் 6-7 தோல்விகளுக்குப் பிறகு இப்படி ஒரு இக்கட்டான நிலையில் நாங்கள் விளையாடுவது கடினம். எங்கள் ஓய்வு அறையும் மகிழ்ச்சியாக அமையவில்லை. அது அணிக்கு சிக்கலான சூழலை விளைவித்தது. இருப்பினும் நாங்கள் இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி உள்ளோம். அடுத்து ஆண்டு சிஎஸ்கே அணியை மொத்தமாக மாற்றி ஆக வேண்டும்.
ஏனெனில் அடுத்த 10 ஆண்டுகளுக்கு நிலையான ஒரு அணியை நாம் அடுத்த தலைமுறைக்கு கொடுத்தாக வேண்டும். ஐபிஎல் துவங்கியபோது நாங்கள் சிறந்த ஒரு அணியை எடுத்து இத்தனை ஆண்டுகள் பயணித்தோம். அதே போன்று இனிவரும் அடுத்த தலைமுறைக்கு ஒரு வலுவான அணியை நிச்சயம் கொடுக்க வேண்டும். அதனால் அணியில் மாற்றங்களை செய்து அதை வழங்குவேன் என தோனி கூறினார்.
