ராஜஸ்தான் அணியை வீழ்த்தி பிளே ஆப்ஸ் வாய்ப்பை தக்கவைத்தது கொல்கத்தா அணி.!
ராஜஸ்தான் அணியை வீழ்த்தி பிளே ஆப்ஸ் வாய்ப்பை தக்கவைத்தது கொல்கத்தா அணி.!
By : Kathir Webdesk
ஐபிஎல் தொடரின் 54வது லீக் போட்டி துபாய் இன்டேர்னேஷ்னல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதை தொடர்ந்து முதலில் களம் இறங்கிய கொல்கத்தா அணியில் தொடக்க வீரர் நித்திஷ் ராணா டக் அவுட் ஆக சுக்மன் கில் அதிரடியாக 36 ரன்கள் அடிக்க பின்னர் வந்த ராகுல் திரிபாதி அதிரடியாக 39 ரன்கள் அடித்து அவுட் ஆக நரைன் டக் அவுட் ஆக பின்னர் வந்த கேப்டன் மோர்கன் சிக்ஸ்ர் மழை பொழிய அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் வழக்கம் போல் டக் அவுட் ஆக ரஸல் வந்த வேகத்தில் 25 ரன்கள் அடித்து அவுட் ஆகினார். அதிரடி காட்டிய கேப்டன் மோர்கன் 68 ரன்கள் குவிக்க 191 ரன்கள் சேர்த்தது.
பின்னர் விளையாடிய ராஜஸ்தான் அணியில் தொடக்கம் சரியில்லாததால் அணி சரிவை சந்தித்தது. உத்தப்பா 6 ரன்னிலும் கேப்டன் ஸ்மித் 4 ரன்னில் அவுட் ஆக பின்னர் வந்த சாம்சன் 1 ரன்னில் வெளியேற ராஜஸ்தான் அணியின் திணறியது. ஸ்டோக்ஸ் 18 ரன்னில் வெளியேற அடுத்து வந்த பட்லர் 35 ரன்னில் அவுட் ஆக திவேட்டியா 31 ரன்னில் அவுட் ஆக ராஜஸ்தான் அணி தோல்வி முகம் ஏற்பட்டது. 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் முலம் நான்காவது இடத்தை பிடித்தது கொல்கத்தா அணி.