Kathir News
Begin typing your search above and press return to search.

சர்வதேச விளையாட்டில் முதல் விக்கெட்டை வீழ்த்திய நடராஜனுக்கு குவியும் வாழ்த்துக்கள்.!

சர்வதேச விளையாட்டில் முதல் விக்கெட்டை வீழ்த்திய நடராஜனுக்கு குவியும் வாழ்த்துக்கள்.!

சர்வதேச விளையாட்டில் முதல் விக்கெட்டை வீழ்த்திய நடராஜனுக்கு குவியும் வாழ்த்துக்கள்.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  3 Dec 2020 1:20 AM IST

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் முதல் விக்கெட்டை வீழ்த்திய இந்திய அணி வீரர் நடராஜனுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் முதலமைச்சர்கள், ஆளுநர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இதனால் இன்று அவர் வாழ்த்து மழையில் நனைந்து வருகின்றார்.


இந்நிலையில், இந்தியா, -ஆஸ்திரேலியா மோதும் 3 வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி ஆஸ்திரேலிய தலைநகரான கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்தப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ஆஸ்திரேலிய அணியை பந்து வீசுமாறு பணித்தார். இதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 302- ரன்களை குவித்தது. இதையடுத்து 303 -ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு ஆஸ்திரேலிய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஆஸ்திரேலிய 303 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை தொடங்கியது.

பும்ராவுடன் டி நடராஜன் பந்து வீச்சை தொடங்கினார். ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர் மார்னஸ் லபுஸ்சேன் விக்கெட்டை இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் கைப்பற்றினார். இதன் மூலம் சர்வதேச அரங்கில் முதல் விக்கெட்டை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். தனது 3- ஓவரில் ரன் எதுவும் கொடுக்காமல் விக்கெட்டை வீழ்த்தி நடராஜன் அசத்தியுள்ளார்.


இந்நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவர் பிறந்த ஊரான சேலத்தில் இளைஞர்கள் பலர் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News