Kathir News
Begin typing your search above and press return to search.

CSK ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்: ஓய்வு அறிவிக்கும் நட்சத்திர வீரர்?

ஐபிஎல் தொடரில் இருந்தும் ஓய்வு பெறுவதாக வெஸ்ட் இண்டீஸின் நட்சத்திர வீரர் டுவைன் பிராவோ அறிவித்துள்ளார்.

CSK ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்: ஓய்வு அறிவிக்கும் நட்சத்திர வீரர்?

Bharathi LathaBy : Bharathi Latha

  |  3 Dec 2022 3:47 AM GMT

ஐபிஎல் தொடரில் இருந்து தற்போது ஓய்வு பெறுவதாக வெஸ்ட் இண்டீஸின் நட்சத்திர வீரர் டுவைன் பிராவோ அறிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மிகவும் முக்கியமான வீரர்கள் பட்டியல் என எடுத்துக் கொண்டால் அதில் இவரும் நிச்சயம் இடம்பெறுவார். அந்த அணியின் முதுகெலும்பாக தற்போது வரை ஆடுகளத்தில் செயல்பட்டு வந்த இவர் ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார்.


39 வயதாகும் டுவைன் பிராவோ, அடுத்த சீசனுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் தக்கவைக்கப்பட்டார். ஆனால் தற்போது திடீரென அவர் அனைத்து வடிவ கிரிக்கெட்டில் இருந்தும் விடைபெறுவதாக அறிவித்துள்ளார். இந்த ஒரு அறிவிப்பின் காரணமாக இவருடைய ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் இருக்கிறார்கள். ஏனெனில் இவருக்கு என்று தனியாக ஒரு ரசிகர் பட்டாளம் எப்பொழுதும் இருக்கும்.


இந்த நிலையில் ஓய்வு அறிவிப்புடன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளார். அவர் வீரராக விலகினாலும் ஓய்வுக்குப் பிறகும் பயிற்சியாளர் என்ற முறையில் கலந்து கொள்வதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார். அதாவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளராக பிராவோ நியமிக்கப்பட்டிருக்கிறார். இதற்கு முன்பு இருந்த லக்‌ஷ்மிபதி பாலாஜி ஓராண்டிற்கு ஓய்வு எடுக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. பிராவோவின் பயிற்சியில் தோனி தலைமையில் CSK வின் செயல்பாட்டை பார்க்க ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர்.

Input & Image courtesy:News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News