ஜோ ரூடின் அதிரடி சதத்தால் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்டில் இங்கிலாந்து அணி முன்னிலை!
ஜோ ரூடின் அதிரடி சதத்தால் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்டில் இங்கிலாந்து அணி முன்னிலை!
By : Pravin kumar
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இலங்கையில் உள்ள காலே மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் பின்னர் முதலில் விளையாடிய இலங்கை அணியில் தொடக்க வீரர்கள் திரிமானே 4 ரன்னில் அவுட் ஆகினார். அவரை தொடர்ந்து குசல் மென்டிஸ் டக்அவுட் ஆகி அவுட் ஆக அவரை தொடர்ந்து குசல் பெரேரா 20 ரன்னில் அவுட் ஆகினார்.
மெத்திவ்ஸ் மற்றும் சண்டிமல் இருவரும் சிறிது நேரம் நிலைத்து விளையாடிய நிலையில் மெத்திவ்ஸ் 27 ரன்னிலும் சண்டிமல் 28 ரன்கள் அடித்து அவுட் ஆகினார். சனாகா 23 ரன்கள் அடித்த நிலையில் மற்ற அனைத்து வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து வெளியேறினர். இதை தொடர்ந்து அனைத்து விக்கெட்டையும் இழந்த இலங்கை அணி 135 ரன்கள் மட்டும் அடித்தது.
பின்னர் விளையாடி இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை இழக்க அடித்து வந்த கேப்டன் ரூட் மற்றும் பேஸ்ரோ இருவரும் இங்கிலாந்து அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றனர். நிலைத்து விளையாடிய கேப்டன் ரூட் சதம் வீளாசினார்.
பேஸ்ரோ 47 ரன்னில் அவுட் ஆக பின்னர் வந்த லாரண்ஸ் நிலைத்து விளையாடி அரைசதம் வீளாசிய நிலையில் 73 ரன்கள் அடித்து அவுட் ஆகினார். அதன் பின்னர் ரூட் 150 ரன்கள் அடித்து அசத்தினார். அதை தொடர்ந்து இங்கிலாந்து அணி 320 ரன்கள் குவித்தது. இலங்கை அணியை விட 185 ரன்கள் முன்னிலையில் உள்ளது.