Kathir News
Begin typing your search above and press return to search.

ஜடேஜாவின் மீது பரபரப்பு குற்றச்சாட்டு - கோபத்தில் இருக்கும் ரசிகர்கள் என்ன ஆச்சு?

இந்திய அணியின் நட்சத்திர வீரரான ரவீந்திர ஜடேஜா செய்து வரும் விஷயங்களால் ரசிகர்கள் கோபத்தில் கண்டனங்களை பதிவிட்டு வருகிறார்கள்.

ஜடேஜாவின் மீது பரபரப்பு குற்றச்சாட்டு - கோபத்தில் இருக்கும் ரசிகர்கள் என்ன ஆச்சு?

Bharathi LathaBy : Bharathi Latha

  |  23 Dec 2022 2:26 AM GMT

இந்திய அணியின் நட்சத்திர வீரராக இருப்பவர் ரவீந்திர ஜடேஜா என்பவர். இவர் செய்து வரும் காரியங்கள் காரணமாக தற்போது இவருடைய ரசிகர்கள் கோபத்தில் கண்டனங்களை பதிவிட்டு வருகிறார்கள். இந்திய கிரிக்கெட் அணி தற்போது வங்காளதேச தொடரான இரண்டு போட்டிகள் கொண்டு டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இதில் ரசிகர்கள் யாரும் எதிர்பாராத வகையில், இந்த தொடரில் தான் அதிக இந்திய வீரர்கள் காயம் காரணமாக வெளியேறி இருக்கிறார்கள்.


குறிப்பாக கேப்டன் ரோகித் சர்மா முதல் முகமது ஷமி, ஜடேஜா, தாக்கூர், சைனி என அடுத்தடுத்து வீரர்கள் வெளியேறி இருக்கிறார்கள். இந்த நிலையில் ரவீந்திர ஜடேஜாவின் காயம் மீது தான் ரசிகர்களுக்கு சந்தேகமே கிளம்பி இருக்கிறது. ஆசிய கோப்பை தொடருக்காக தேர்வு செய்யப்பட்ட ஜடேஜா திடீரென காலில் ஏற்பட்ட காயின் காரணமாக அணியில் இருந்து விலகினார். அதன் பின்னர் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு டி20 உலக கோப்பையில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட பொழுதும் அவர் அதிலிருந்து விலகினார்.


வங்காளதேச உடனான தொடரில் தற்போது வந்து விடுவார் என்று கூறப்பட்ட சூழ்நிலையில், உடற்பகுதி பெறவில்லை என்ற காரணத்திற்காக அவர் வீட்டிலேயே இருந்து விட்டார். இந்த சூழ்நிலையில் தான் ஜடேஜா பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் இணைந்துள்ளார். இவர் அடுத்தடுத்து வரும் ஜனவரி மாதம் வரவுள்ள இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுவார் என்று கூறப்பட்டுள்ளது. சில அரசியல் காரணங்களுக்காக தான் இவர் தேசத்திற்காக விளையாடாமல் இருக்கிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்து இருக்கிறது.

Input & Image courtesy:News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News