மூன்றாவது போட்டியில் தோற்றதற்கு இவர்கள் தான் காரணம் பின்ச் வெளிப்படை.!
மூன்றாவது போட்டியில் தோற்றதற்கு இவர்கள் தான் காரணம் பின்ச் வெளிப்படை.!
By : Pravin kumar
இந்தியா- ஆஸ்திரேலியா அணிக்களுக்கு இடையேயான மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரண்டு போட்டிகள் நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில் மூன்றாவது போட்டி இன்று ஆஸ்திரேலியாவில் உள்ள கான்பெர்ரா மைதானத்தில் நடைபெற்றது.
இந்த தொடரை ஏற்கனவே ஆஸ்திரேலியா அணி முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று வென்ற நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை செய்தது. முதலில் விளையாடிய இந்திய அணியில் தவன் 16 ரன்னிலும் கில் 33 ரன்னில் அவுட் ஆக பின்னர் வந்த வீராட் கோலி 63 ரன்கள் அடித்து அவுட் ஆக அதன் பின்னர் களம் ஸ்ரேயஸ் ஐயர் 16 ரன்னிலும் கே.எல் ராகுல் 5 ரன்னிலும் அவுட் ஆகினர்.
பின்னர் ஜோடி சேர்ந்த ஜடேஜா மற்றும் ஹர்டிக் பாண்டியா இருவரும் இந்திய அணிக்கு சிறப்பான ஆட்டத்தை கொடுக்க ஹர்டிக் பாண்டியா 92 ரன்களும் ஜடேஜா 66 ரன்களும் அடிக்க இந்திய அணி 302-5 ரன்கள் சேர்த்தனர்.
பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா அணியில் பின்ச் 75 ரன்களும் மேக்ஸ்வெல் 59 ரன்கள் அடித்தனர். மற்ற வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை இழக்க இந்திய அணி பேராடி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்று கோப்பையை வென்றது. ஆட்டநாயகனாக ஹர்டிக் பாண்டியாவும் தொடர் நாயகனாக ஸ்மித் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில் போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பின்ச் கூறுகையில் : நாங்கள் இந்த போட்டியில் சிறப்பாக போராடினோம் என்று நினைக்கிறேன். ஹர்டிக் பாண்டியா மற்றும் ஜடேஜா ஆகிய இருவருக்கும் இடையே இருந்த பார்ட்னர்ஷிப் மிக அருமையாக இருந்தது. அவர்களே எங்ளிடமிருந்து போட்டியை பறித்து விட்டனர்.
அவர்கள் இருவரில் ஒருவரது விக்கெட்டை கைப்பற்றி இருந்தாலும் நாங்கள் 240 ரன்களை மட்டுமே சேசிங் செய்ய வேண்டியதாக இருந்திருக்கும். ஆனால் அவர்கள் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பெரிய இலக்கை நிர்ணயித்து விட்டார்கள இதுவே எங்களின் தோல்விக்கு காரணம்.