Begin typing your search above and press return to search.
கால்பந்து போட்டி.. கோவா அணி அரை இறுதிக்கு தகுதி.!
7வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் கோவா மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 11 அணிகள் கலந்து கொண்டுள்ளது.
By : Thangavelu
7வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் கோவா மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 11 அணிகள் கலந்து கொண்டுள்ளது.
இதில் நேற்று மாலை நடந்த 109-வது லீக் ஆட்டத்தில் எப்.சி. கோவா மற்றும்- ஐதராபாத் எப்.சி. ஆகிய அணிகள் மோதியது. இப்போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில் ஐதராபாத்தும், டிரா செய்தாலே அரை இறுதி வாய்ப்பு என்ற சூழலில் கோவா அணியும் மோதியது.
சுறுசுறுப்பான இந்த ஆட்டத்தில் இரு அணியினரும் கோல் போடுவதற்கு நெருங்கி வந்தார்களே தவிர கடைசி வரை ஒரு கோல் அடிக்கவில்லை.
இதனால் ஆட்டம் கோல் இன்றி (0-0) டிராவில் முடிந்தது. இதனால் கோவா எப்.சி. அணி புள்ளி பட்டியலில் 4-வது இடத்தை பிடித்து அரை இறுதியில் நுழைந்தது. அந்த அணிக்கு அனைவரும் பாராட்டு மற்றும் வாழ்த்துக்களை ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
Next Story