Kathir News
Begin typing your search above and press return to search.

தொடர் நாயகன் விருதை நடராஜனுக்கு வழங்கிய ஹர்டிக் பாண்டியா.!

தொடர் நாயகன் விருதை நடராஜனுக்கு வழங்கிய ஹர்டிக் பாண்டியா.!

தொடர் நாயகன் விருதை நடராஜனுக்கு வழங்கிய ஹர்டிக் பாண்டியா.!

Pravin kumarBy : Pravin kumar

  |  9 Dec 2020 1:27 PM GMT


இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று முடிவடைந்துள்ளது. முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று ஏற்கனவே இந்திய அணி தொடரை வென்று விட்ட நிலையில் மூன்றாவது டி-20 போட்டி சிட்னி மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணியில் கேப்டன் பின்ச் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளிக்க மேத்திவ் வேட் 80 ரன்களும் மேக்ஸ்வேல் 54 ரன்கள் அடிக்க ஆஸ்திரேலியா அணி 185 ரன்கள் குவித்தது.

பின்னர் விளையாடிய இந்திய அணியில் கே.எல். ராகுல் டக்அவுட் ஆக பின்னர் வந்த கேப்டன் கோலி நிலைத்து விளையாடி அரைசதம் விளாசினார். ஷிகர் தவன் 24 ரன்களும் பாண்டியா 20 ரன்களும் அடிக்க ஷ்ரெயர்ஸ் ஐயர் டக் அவுட் ஆக இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்திய அணி தொடரை 2-1 என்ற கணக்கில் வென்ற நிலையில் தொடர் நாயகன் விருது ஹர்டிக் பாண்டியா வென்று அசத்தினார்.

மேலும் இனி வரும் தொடர்களில் அவர் பெயர் இந்திய அணியில் நிச்சயம் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று போட்டி முடிந்து நடராஜன் உடன் எடுத்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட பாண்டியா குறிப்பிட்டதாவது : நடராஜன் இந்து இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டார். ஆஸ்திரேலியா போன்ற கடினமான ஆடுகளத்தில் முதல் தொடரிலேயே உங்களது கடின உழைப்பையும், திறமையையும் நீங்கள் வெளிப்படுத்தி உள்ளீர்கள். “என்னை பொருத்தவரை நீங்கள்தான் தொடர் நாயகன்” அண்ணா என்று பதிவிட்டு அவருடன் கிடைத்த இந்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

கடைசியாக நடைபெற்ற 2வது டி20 போட்டி என்பது கூட ஆட்டநாயகன் விருதை வென்ற ஹர்டிக் பண்டியா இந்த விருது என்னைவிட நடராஜனுக்கு சரியானதாக இருக்கும் என ஏற்கனவே பாராட்டி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News