இந்தியா ஆஸ்திரேலியா ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: சாதனையை நோக்கி விராட் கோலி!
இந்திய மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டியில் சாதனையை நோக்கி நகர்வாரா விராட் கோலி?
![இந்தியா ஆஸ்திரேலியா ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: சாதனையை நோக்கி விராட் கோலி! இந்தியா ஆஸ்திரேலியா ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: சாதனையை நோக்கி விராட் கோலி!](https://kathir.news/h-upload/2023/03/17/1480431-adobeexpress2023031718053801.webp)
இந்தியாவில் தற்பொழுது சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார் ஆசிரியர் கிரிக்கெட் அணி தற்போது டெஸ்ட் தொடரில் ஒன்று இரண்டு என்று கணக்கில் இந்தியாவிடம் தோல்வியை தழுவி இருக்கிறது. அடுத்தடுத்து ஆக மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. குறிப்பாக இந்த முறை இந்தியாவை தோற்கடிக்க வேண்டும் என்று ஒரு முனைப்புடன் பல்வேறு தீவிர பயிற்சிகளை அவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.
இதன்படி இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இரவு பகலாக இன்று நடக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் அக்டோபர் நவம்பர் மாதங்களில் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடப்பதால் அதற்கு அணியை சரியாக திட்டமிடுதலுக்கு தயார்படுத்துவதற்கு இந்த ஒரு தொடர் மிகவும் அடித்தளமாக இருக்கும் என்று கூறப்பட்டு இருக்கிறது. இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தன்னுடைய நெருங்கிய உறவினரின் திருமணம் காரணமாக அவர் தொடக்க ஆட்டத்தில் விளையாட முடியவில்லை.
இதன் காரணமாக தற்போது இந்திய அணியின் தலைமை பொறுப்பு ஹர்திக் அவர்களிடம் சென்று இருக்கிறது. ரோகித் சர்மா இல்லாமல் சுமன் கில் உடன் இணைந்து இஷான் தொடக்க ஆட்டக்காரராக இறங்குவார் என்று ஹர்திக் அவர்கள் உறுதி செய்து இருக்கிறார். அகமதாபாத் ஸ்டேடியத்தில் சதம் அடித்தால் நட்சத்திர வீரர் விராட் கோலி கூடுதல் நம்பிக்கையுடன் களமிறங்க இருக்கிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் கடைசி ஏழு இன்னும் சில மூன்று சதங்களை அவர் விலாசி இருக்கிறார். ஒட்டுமொத்தத்தில் அவர் 46 சதங்கள் அடித்து இருக்கிறார். ஒரு நாள் போட்டியில் அதிக சதங்கள் எடுப்பவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் சச்சின் டெண்டுல்கரை ஈடு செய்யும் அளவிற்கு விராட் கோலிக்கு இன்னும் மூன்று சதம் தேவைப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: Hindustan News