Kathir News
Begin typing your search above and press return to search.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி டெஸ்ட் தொடர்: இந்திய அணி 571 ரன்கள் குவிப்பு!

இந்திய அணி 571 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் தொடரில் முன்னிலையில் இருக்கிறது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி டெஸ்ட் தொடர்: இந்திய அணி 571 ரன்கள் குவிப்பு!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  14 March 2023 12:57 AM GMT

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ்க் ஜெயித்த ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து 480 ரன்கள் சேர்த்தது. பின்னர் முதல் இன்னிசை தொடங்கிய இந்திய அணி மூன்றாவது நாள் முடிவில் 99 ஓவர்களில் மூன்று நாட்கள் தொடர்ந்து 281 ரன்கள் குவித்து இருந்தது. நான்காவது நாள் நேற்று இந்தியா அணி 571 ரன்கள் குறித்து இருக்கிறது.


இதுல தொடர்ந்து விராட் கோலி ஆல் ரவுண்டர் மற்றும் அக்ஷேர் படேல் ஆகியோர் இணைந்து கைகோர்த்து மேலும் ஒன்று மற்றும் இரண்டு வீதம் ரன் எடுப்பதில் கவனம் செலுத்தினார்கள். நேற்றைய தினம் சதத்தை தொடும்படி ஒரு பவுண்டர் கூட அடிக்கவில்லை என்பது ஆச்சரியமான உண்மையாகும். இந்த டெஸ்ட் தொடரில் இந்திய முன்னாள் கேப்டன் விராட் கோலி முதல் இன்னிங்ஸ் 15 பவுண்டரிகளுடன் 186 ரன்கள் குறித்து முதன்மைப்படுத்தினார். மேலும் 125 நாட்களுக்கு பிறகு டெஸ்டில் மூன்று இலக்கை தொட்ட கோலி சில சாதனைகளை தன்வசப்படுத்தி இருக்கிறார்.


ஆஸ்திரேலிய அவர்கள் எதிரான எட்டாவது முறையாக சதம் அடித்த கோலி இந்த அணிக்கு எதிராக அதிக திறமை சதம் படித்த இந்தியர்களின் வரிசையில் இரண்டாவது இடத்தில் இடம் பிடித்திருக்கிறார். விராட் கோலிக்கு உடல்நல குறைவு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் அவை உண்மை இல்லை என்று அவருடன் இணைந்து விளையாடிய அக்ஷர் படேல் தெரிவித்து இருக்கிறார். அவர் ரன் எடுக்க ஓடிய விகிதத்தை பார்க்கும் பொழுது அவருக்கு உடல்நல குறைவு இருந்த மாதிரி தோன்றவில்லை என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

Input & Image courtesy:Maalaimalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News