Kathir News
Begin typing your search above and press return to search.

நியூசிலாந்து கிரிக்கெட் தொடர்: இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

நியூசிலாந்து கிரிக்கெட் தொடருக்காக இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா, தவான் நியமனம்.

நியூசிலாந்து கிரிக்கெட் தொடர்: இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  2 Nov 2022 2:54 AM GMT

20 ஓவர் உலகக்கோப்பை தொடர் முடிந்த அடுத்த சில இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்கு மூன்று 20 ஓவர் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. மேலும் இந்த போட்டிகளின் போது இந்தியா நியூசிலாந்து இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி வருகின்ற 18ஆம் தேதி நடக்கிறது. நியூசிலாந்து தொடருக்காக இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. 20 ஓவர் போட்டிக்கு ஹர்திக் மற்றும் ஒரு நாள் போட்டிக்கு தவானும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.


ரோகித் சர்மா, விராட் கோலி, லோகேஷ் ராகுல், அஸ்வின், தினேஷ் கார்த்திக் உள்ளிட்டோருக்கு பணிசுமை காரணமாக ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் ஆடும் இந்திய அணி பட்டியலும் தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது. நியூசிலாந்துக்கு எதிராக இந்திய ஒரு நாள் போட்டி மற்றும் அதற்கான கேப்டனும் நியமிக்கப்பட்டு உள்ளார்கள். இந்த தொடர் முடிந்ததும் இந்திய அணி வங்காளத்திற்கு சென்று மூன்று நாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கே இருக்கிறது.


ஒருநாள் போட்டிகளில் டிசம்பர் 4,7,10 ஆகிய தேதிகளிலும் டெஸ்ட் போட்டிகளில் டிசம்பர் 14,18,22,26 ஆகிய தேதிகளிலும் நடைபெறுகிறது. இதற்காக இந்திய தலைமை சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வு கமிட்டி நேற்று அறிவித்தது. மேலும் ஓய்வு அளிக்கப்பட்டு இருந்த கேப்டன் ரோகித் சர்மா விராட் கோலி ஆகியோர் வங்காள வங்காளதேச தொடரில் விளையாட இருக்கிறார்கள். முதுகில் ஏற்பட்ட காயத்தினால் உலக கோப்பையில் தொடரிலிருந்து விலகிய வேகப்பந்து பேச்சாளர் இரு தொடரிலும் இடம்பெறவில்லை. காயத்தால் உலக கோப்பை போட்டியில் இடம் பெறாத ஆள் ரவுண்டர் ஜடேஜாவுக்கும் வங்காளத் தொடர் மூலம் அணிக்கு திரும்புகிறார்.

Input & Image courtesy: News 18

Next Story
கதிர் தொகுப்பு
Trending News