Kathir News
Begin typing your search above and press return to search.

ஒலிம்பிக்: 3000 மீட்டர் தடைதாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் 7ம் இடம் பிடித்து தோல்வி.!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று 3000 மீட்டர் ஆடவர் தடைதாண்டுதல் ஓட்டத்தில் இந்திய வீரர் அவினாஷ் சேபிள் 7ம் இடம் பிடித்து இறுதுப் போட்டியில் நுழையும் வாய்ப்பினை நழுவவிட்டார்.

ஒலிம்பிக்: 3000 மீட்டர் தடைதாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் 7ம் இடம் பிடித்து தோல்வி.!

ThangaveluBy : Thangavelu

  |  30 July 2021 4:04 AM GMT

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று 3000 மீட்டர் ஆடவர் தடைதாண்டுதல் ஓட்டத்தில் இந்திய வீரர் அவினாஷ் சேபிள் 7ம் இடம் பிடித்து இறுதுப் போட்டியில் நுழையும் வாய்ப்பினை நழுவவிட்டார்.


ஜப்பானில் கடந்த 23ம் தேதி முதல் ஒலிம்பிக் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ரசிகர்களின் அதிக எதிர்பார்ப்புக்குரிய போட்டிகளில் ஒன்றான தடகளம் இன்று தொடங்கியுள்ளது. தடகளத்தில் பல்வேறு பிரிவு ஓட்டப்பந்தயம், நடைபந்தயம், மாரத்தான், வட்டு எறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், நீளம் தாண்டுதல், டெகத்லான், உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்று வருகிறது.


இந்நிலையில், ஆடவருக்கான 3000 மீட்டர் தடைதாண்டுதல் ஓட்டப்பந்தயத்துக்கான தகுதிச் சுற்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் அவினாஷ் சேபிள் பங்கேற்றார். பந்தய தூரமான 3000 மீட்டரை 8:18 நிமிடம் 12 விநாடிகளில் கடந்து அவர் 7ம் இடத்தை பிடித்து தோல்வியை தழுவினார். ஆனாலும் 3000 மீட்டரை விரைவாக கடந்து தேசிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

நியூஸ் Source: ட்விட்டர்

Image Courtesy: Google

Next Story
கதிர் தொகுப்பு
Trending News