Kathir News
Begin typing your search above and press return to search.

காமன்வெல்த் விளையாட்டில் இந்திய வீரர் சாதனை

உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் வெண்கலம் வென்று சாதனை.

காமன்வெல்த் விளையாட்டில் இந்திய வீரர் சாதனை

KarthigaBy : Karthiga

  |  5 Aug 2022 12:00 PM GMT

காமன்வெல்த் விளையாட்டில் உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் தேஜஸ்வின் வெண்கலம் வென்று சாதனை படைத்தார்.

72 நாடுகள் பங்கேற்ற 22வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிய இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் தேஜஸ்வின் சங்கர் 2.22 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கத்தை உச்சி முகர்ந்தார்.

வரலாற்றில் உயரம் தாண்டுதலில் இந்தியா வென்ற முதல் பதக்கம் இதுதான். நியூசிலாந்தின் ஹாமிஷ் கெர் தங்கப்பதக்கமும், ஆஸ்திரேலியாவின் பிரான்டன் ஸ்டார்க் வெள்ளிப் பதக்கமும் பெற்றனர்.

பிரான்டன் ஸ்டார்க் பிரபல ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கின் தம்பி .அவர் தனது சிறந்த செயல்பாடாக 2.29 மீட்டர் வரை உயரம் தாண்டி இருக்கிறார். அதேபோன்று எகிரி இருந்தால் அவரது கழுத்தை தங்கப்பதக்கம் அலங்கரித்து இருக்கும்.23 வயதான தேஜஸ்வின் சங்கருக்கு தொடக்கத்தில் இந்திய அணியில் இடம் கொடுக்க இந்திய தடகள சம்மேளனம் மறுத்தது. அடுத்து இதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து,கோர்ட்டு உத்தரவிட்ட பிறகு கடைசி நேரத்தில் அணியில் சேர்க்கப்பட்டார்.

வழக்கறிஞர் தம்பதியின் மகன் அஸ்வின் டெல்லியில் பிறந்து வளர்ந்தவர் என்றாலும் அவரது பூர்வீகம் திருச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

தேஜஸ்வின்சங்கர் கூறுகையில் 'இந்த காமன்வெல்த் விளையாட்டில் தடகளத்தில் பதக்க கணக்கு தொடங்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது வீட்டிற்கு ஏதோ ஒரு பதக்கத்துடன் திரும்புவது பரவசம் அளித்தது என் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை வழங்கியதற்கு மிக்க நன்றி' என்றார்.

அவருக்கு டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி'தேஜஸ்வின் சங்கர் வரலாறு படைத்து விட்டார். காமன்வெல்த் விளையாட்டில் உயரம் தாண்டுதலில் பதக்கத்தை அவர் வென்றிருக்கிறார அவர் எடுத்துக்கொண்ட முயற்சி பெருமை அளிக்கிறது எதிர்கால போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள்'என்று கூறியுள்ளார்.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News