ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகிய இந்திய நட்சத்திர பேட்மேன்!
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகிய இந்திய நட்சத்திர பேட்மேன்!
By : Pravin kumar
இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் 7ம் தேதி சிட்னி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்ச்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர். நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டிகள் வெற்றி பெற்று உள்ளன.
இந்நிலையில் மூன்றாவது போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் முதல் இரண்டு போட்டிகளில் காயம் காரணமாக விளையாடாமல் இருந்து டேவிட் வார்னர் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் களம் இறங்குவார் என தெரிகிறது.
அதேபோல் இந்திய அணியில் இணைந்துள்ள ரோஹித் சர்மா மூன்றாவது டெஸ்ட் போட்டியில் களம இறங்க உள்ளார். மூன்றாவது டெஸ்ட் போட்டியில் புதிய புதிய வீரர்கள் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. தமிழக வீரர் நடராஜன் காயம் காரணமாக வெளியேறிய உமேஷ் யாதவ் பதிலாக அணியில் இணைந்துள்ளார்.
அவரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இணைவார் என தெரிகின்றது. ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கே.எல் ராகுல் பயிற்சியின் போது காயம் ஏற்பட்டு தொடரில் இருந்து விலகி உள்ளார். அவர் ஹனுமன் வீஹாரி இடத்தில் விளையாடுவார் என கூறப்பட்டது.