Kathir News
Begin typing your search above and press return to search.

இஷான் கிஷானை பாராட்டிய ரோகித் சர்மா!

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் 20 ஓவர் போட்டி நேற்று (பிப்ரவரி 24) லக்னோவில் தொடங்கியது.

ThangaveluBy : Thangavelu

  |  25 Feb 2022 12:35 PM GMT

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் 20 ஓவர் போட்டி நேற்று (பிப்ரவரி 24) லக்னோவில் தொடங்கியது. முதலாவதாக பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவின்போது 2 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்திருந்தது. இஷான்கிஷன் 89 ரன்களை எடுத்திருந்தார். ஸ்ரேயாஸ் அய்யர் 57 ரன்னும், கேப்டன் ரோகித் சர்மா 44 ரன்களை எடுத்திருந்தனர்.

அவர்களை தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்தியா 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை அணியை பொறுத்தவரையில் அசலங்கா 53 ரன் எடுத்திருந்தார்.

இந்நிலையில், இந்திய அணி வெற்றி குறித்து கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில்; இஷான் கிஷனின் மன நிலையும், திறமையும் நன்கு அறிந்துள்ளேன். அவர் பேட்டிங் செய்வதை பார்த்தால் மகிழ்ச்சியாக இருக்கும். வெற்றி பெறுவதற்கான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தார். எனவேதான் அவரை முன்னரே பேட்டிங் செய்ய அனுப்பியிருந்தோம் என்று பாராட்டினார்.

Source: Maalaimalar

Image Courtesy: Sportskeeda

Next Story
கதிர் தொகுப்பு
Trending News