Kathir News
Begin typing your search above and press return to search.

சென்னை சேப்பாகம் மைதானத்தில் டெஸ்ட் தொடருக்காக இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி!

சென்னை சேப்பாகம் மைதானத்தில் டெஸ்ட் தொடருக்காக இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி!

சென்னை சேப்பாகம் மைதானத்தில் டெஸ்ட் தொடருக்காக இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி!
X

Pravin kumarBy : Pravin kumar

  |  2 Feb 2021 4:54 PM IST

ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தை முடித்த இந்திய அணி அடுத்தாக பிப்ரவரியில் இங்கிலாந்து அணியுடன் மிகப்பெரிய தொடரில் விளையாட இருக்கிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி 4 டெஸ்ட், 5 டி20 மற்றும் 3 ஒருநாள் என மிகப்பெரிய தொடரில் விளையாட உள்ளது. இதில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் பிப்ரவரி 5ம் தேதி சென்னையில் தொடங்க உள்ளது.

இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னையிலும் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகள் அகமதாபாத்திலும் நடத்த திட்டமிட்டுள்ளது.இதைத்தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மார்ச் 12ம் தேதி அகமதாபாத் மைதானத்திலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மார்ச் 23ம் தேதி புனே மைதானத்திலும் நடத்த திட்டமிட்டுள்ளனர். தற்போது முதலில் நடைபெறயிருக்கும் இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுயிருக்கிறது. இரு அணிகளிலும் பல்வேறு மாற்றங்களும் செய்யப்பட்டிருக்கிறது.

இதையடுத்த இரு அணி வீரர்களும் தற்போது சென்னை வந்தடைந்து 6 நாட்கள் குவாரன்டையனில் இருக்கின்றனர். 2ம் தேதியில் இருந்து பயிற்சி தொடங்க இருந்த நிலையில் இன்று இந்திய கிரிக்கெட் வீரர்கள் சென்னை சேப்பாகம் மைதானத்தில் முதல் நாள் பயற்சியை மேற்கொண்டனர். இந்த பயிற்சியில் செக்சனில் வீராட் கோலி ரோஹித் சர்மா ரிஷப் பண்ட் போன்ற அனைத்து வீரர்களும் பங்கேற்னர்.தீீவிர பயிற்சியை மேற்கொண்டு வரும் இந்திய அணி இந்த தொடரை சொந்த மண்ணில் விளையாட உள்ளதால் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் உள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News