Kathir News
Begin typing your search above and press return to search.

ஐ.பி.எல். திருவிழா நாளை கோலாகலமாக துவக்கம்!

ஐ.பி.எல். திருவிழா நாளை கோலாகலமாக துவக்கம்!

ThangaveluBy : Thangavelu

  |  25 March 2022 1:58 PM GMT

ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 2008ம் ஆண்டு முதன் முதலில் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது இருந்து தொடர்ச்சியாக மார்ச் மாதம் கடைசியில் போட்டி துவங்கும். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக போட்டிகள் நடைபெறாமல் தள்ளி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதன்படி 15வது ஐபிஎல் திருவிழா 2022ம் ஆண்டுக்கான போட்டி நாளை (மார்ச் 26) தொடங்க உள்ளது.

கொரோனா பெருந்தொற்று குறைந்து வந்த நிலையில், ஐபிஎல் லீக் போட்டிகள் அனைத்தும் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடத்தப்படுகிறது. மும்பையில் உள்ள வான்கடே, பிராபோர்ன் ஸ்டேடியங்கள், நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல், புனேயில் உள்ள எம்.சி.ஏ. உள்ளிட்ட 4 மைதானங்களில் போட்டி நடைபெறுகிறது. தற்போதைய சீசனில் இரண்டு புதிய அணிகள் பங்கேற்கின்றது. மொத்தம் 10 அணிகள் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: Malaimalar

Image Courtesy: SportzCraazy.Com

Next Story
கதிர் தொகுப்பு
Trending News