Kathir News
Begin typing your search above and press return to search.

ஐ.பி.எல். போட்டி விதிமுறையில் மாற்றம்!

ஐ.பி.எல். போட்டி விதிமுறையில் மாற்றம்!

ThangaveluBy : Thangavelu

  |  15 March 2022 12:25 PM GMT

15வது ஐபிஎல் கிரிக்கெட் 20 ஓவர் போட்டி மார்ச் 26ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதில் 10 அணிகள் கலந்து கொள்ளும் நிலையில் தற்போது சில மாற்றங்களை இந்திய கிரிக்கெட் வாரியம் செய்துள்ளது.

அதாவது நடுவர் முடிவை மறு பரிசீலனை செய்கின்ற வாய்ப்பு ஒவ்வொரு இன்னிங்சிலும் ஒன்றில் இருந்து 2ஆக உயர்த்தப்படுகிறது. கொரோனா தொற்றால் ஒரு அணி பங்கேற்ற முடியவில்லை எனில் அதற்கான ஆட்டம் அடுத்த நாட்களில் வைப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்படும். அது முடியாதபட்சத்தில் ஐபிஎல் தொழில்நுட்ப குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இதற்கு முன்னர் தள்ளி வைக்கப்பட்ட போட்டியான மறு தேதியில் நடத்த முடியவில்லை எனில் களம் இறங்காத அணி தோற்றதாக எடுத்துக்கொள்ளப்படும்.

Source: Maalaimalar

Image Courtesy: Deccan Chronicle

Next Story
கதிர் தொகுப்பு
Trending News