Kathir News
Begin typing your search above and press return to search.

CSK அணி வீரருக்கு இப்படி ஒரு ஆசையா... ரகசியத்தை போட்டு உடைத்த கிரிக்கெட் வீரர்!

CSK அணியின் அதிவேக அரை சதம் அடித்த ரஹானே மும்பை வான்கடே மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதற்கு ஆசையாம்.

CSK அணி வீரருக்கு இப்படி ஒரு ஆசையா... ரகசியத்தை போட்டு உடைத்த கிரிக்கெட் வீரர்!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  11 April 2023 3:49 AM GMT

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் தற்பொழுது CSK அணி மிகவும் அற்புதமாக விளையாடி வருகிறது. குறிப்பாக நேற்றைய முன் தினம் தொடக்க ஆட்டத்தில் கூட மும்பையில் நடந்த ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி இருக்கிறது. நிர்ணயித்த 158 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணி ஏழு விக்கெட் அதிகமாக பெற்று வெற்றி பெற்று இருக்கிறது. குறிப்பாக 19 பந்துகளை 50 ரன்கள் கடந்து நடப்பு தொடரின் போது, மின்னல் வேக அரைசதம் அடித்த வீரர் என்று சிறப்பை ரஹானே பெற்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


குறிப்பாக கடந்த மூன்று ஆண்டுகளில் இந்திய டெஸ்ட் அணியில் ஓரம் கட்டப்பட்ட இவர் தற்பொழுது சிறப்பாக தன்னுடைய திறமைகளை வழிகாட்டி வருகிறார். அப்பொழுது அவர் பேட்டியின் போது இது பற்றி கூறுகையில், நான் எப்பொழுதும் வான்கடே மைதானத்தில் ரசித்து அனுபவித்து விளையாடுவேன். ஆனால் இங்கு ஒரு டெஸ்ட் கூட நான் ஆடியதில்லை. எனவே இந்த இந்திய அணிக்காக இங்கு ஒரு டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது. இன்று அவர் வெளிப்படையாக பேசி இருக்கிறார் மேலும் ஆட்டத்தின் பொழுது பயங்கரமாக ரசிகர்கள் உற்சாகம் கொடுத்தார்கள்.


டாஸ்க் போடுவதற்கு முன்புதான் நானே இங்கே விளையாடுவது தெரிய வந்தது, மாற்று ஆட்டக்காரருக்கு உடல்நிலை சரியில்லாததால் நான் அவருக்கு பதிலாக விளையாடுகிறேன் என்று தெரிவித்தார். IPLல் ஒரு நீண்ட தொடர் இதில் எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் எதற்கும் தயாராக இருக்க வேண்டும் அந்த வாய்ப்பு கிடைக்கும் போது தங்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கேப்டன் தோனியும், பயிற்சியாளர் கூறுவார்கள் அனைவருக்கும் வாய்ப்புகளை தருவார்கள் என்று அவர் கூறியிருக்கிறார்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News