Kathir News
Begin typing your search above and press return to search.

IPL போட்டிகளில் அடுத்த ஆண்டு தோனி இடம் பெறுவாரா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

ரசிகர்கள் எதிர்பார்த்த படி ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அடுத்த ஆண்டு தோனி இடம் பெறுவாரா

IPL போட்டிகளில் அடுத்த ஆண்டு தோனி இடம் பெறுவாரா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

Bharathi LathaBy : Bharathi Latha

  |  11 May 2023 4:09 AM GMT

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி தற்போது நடப்பு தொடரில் விளையாடுகிறார். ஆனால் இந்த தொடரிலேயே தோனி இடம் பெறுவாரா? என்பது ரசிகர்களின் மத்தியில் பெரும் கேள்வி ஏற்படுத்த இருந்தது, அந்த வகையில் இந்த வருடம் அவர் இடம் பிடித்து விட்டார். அடுத்த வருடம் இந்த நிலைமை நீடிக்குமா என்று ரசிகர் மனதில் மற்றொரு கேள்வி எழுந்து இருக்கிறது. இது தொடர்பாக சிஎஸ்கே அணியின் கேப்டன் டோனி அவர்கள் கூறும் பொழுது, தனது கிரிக்கெட் வாழ்க்கையை கடைசி கட்டத்தை அனுபவித்து வருகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.


அதனால் அவர் இந்த சீசனுடன் ஓய்வு பெறக்கூடும் என்றும் பல்வேறு தரப்பினர் கூறி வருகிறார்கள். அதன் பிறகு லக்னோவில் எடுத்த லக்னோ சூப்பர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் போடும் நிகழ்ச்சியின் போது தோனியிடம் டெலிவிஷன் தொகுப்பாளர் உங்களது கடைசி ஐபிஎல் தொடரை எப்படி அனுபவித்து வருகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு நீங்கள் தான் இது எனக்கு இறுதி தொடர் இன்று முடிவு செய்து இருக்கிறீர்களே நான் அப்படி எதுவும் சொல்லவில்லையே என்று தெளிவுபடுத்தி பதில் அளித்து இருக்கிறார்.


இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோனியுடன் நீண்ட காலம் இணைந்து ஆடிய முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, காணொளி மூலம் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். சமீபத்தில் நான் தோனியை சந்தித்து பேசினேன் அப்போது அவர் இந்த ஆண்டு ஐபிஎல் கோப்பையை வெல்வேன் என்றும், அடுத்த ஆண்டு போட்டியிலும் விளையாடுவேன் என்றும் தெரிவித்தார். டோனி நல்ல நிலையில் இருக்கிறார். உண்மையில் சிறப்பாக ஆடி வருகிறார் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News