Kathir News
Begin typing your search above and press return to search.

IPL ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தகவல்: அட்டகாசமான விருந்து வழங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ்!

IPL சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையிலான ஆட்டம்.

IPL ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தகவல்: அட்டகாசமான விருந்து வழங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ்!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  4 April 2023 2:16 AM GMT

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மைதானத்தில் ஆட்டம் நடைபெற இருக்கிறது. 2 ஆக ஆட்டம் நடைபெற இருக்கிறது. குறிப்பாக சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் லக்னோ அணிகள் இன்று மோதி இருக்கிறது. ஏற்கனவே அதில் சென்னை நிர்ணயித்த 179 ரன் இலக்கை குஜராத் அணி நான்கு பந்து வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது. இதன் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் தற்பொழுது தீவிரமாகப் பயிற்சிகளை மேற்கொண்டு வந்து இருக்கிறார்கள்.


சென்னை மற்றும் லக்னோ அணிகள் இன்று மோத இருப்பது ரசிகர் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இன்றைய ஆட்டம் உள்ளூரில் நடைபெற இருப்பது மற்றும் சிறப்பான தகவல். ஏனெனில் 2019 தான் ஆண்டிற்கு பிறகு முதன்முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளூரில் விளையாட இருக்கிறது. ரசிகர்களின் மெதுவான தன்மை கொண்ட ஆடுகளமும் சென்னை வீரர்களுக்கு நிச்சயம் வேகம் அளிக்கும் என்று கூறப்பட்டு இருக்கிறது. இங்கு 56 ஆட்டங்களில் அணி 40 வெற்றிகளை சென்னை அணி பெற்றது. இந்த சீசனில் இங்கிருந்து வெற்றிகளை தொடங்குமா என்று ரசிகர்கள் பெரும் அவளுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் மற்ற ஐபிஎல் கிரிக்கெட்டில் இந்த சீசனில் சென்னை பக்கத்தில் ஏழாம் லிக் ஆட்டங்கள் நடைபெற இருக்கிறது இது சேப்பாக்கத்தில் நடக்கும். ஐ.பி.எல் போட்டிகளை காண வருகை தரும் ரசிகர்கள் இலவசமாக மெட்ரோ ரயில் பயணிக்க வழிவகை செய்யும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கும் இடையே ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.


இப்படி ரசிகர்கள் அனைவரும் இலவசமாக மெட்ரோ ரயிலில் பயணம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ரசிகர்கள் டிக்கெட்டில் உள்ள கியூ.ஆர் பார்கோடுகளை ஸ்கேன் செய்து மெட்ரோ ரயில் நிலையத்தில் இலவசமாக பயணிக்கலாம் என்று குறிப்பிட்டு இருக்கிறது.

Input & Image courtesy: Oneindia News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News