Kathir News
Begin typing your search above and press return to search.

அணிக்குள் ஈகோ இருக்கக் கூடாது.. சேவாக் அறிவுரை.. எந்த அணி தெரியுமா?

அணிக்குள் ஈகோ இருக்கவே கூடாது என பஞ்சாப் அணிக்கு சேவாக் அறிவுரை.

அணிக்குள் ஈகோ இருக்கக் கூடாது.. சேவாக் அறிவுரை.. எந்த அணி தெரியுமா?

Bharathi LathaBy : Bharathi Latha

  |  20 May 2023 3:12 AM GMT

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ரிட்டயர்ட் அவுட் முறையில் பஞ்சாப் அணியின் அதர்வா தய்டே வெளியேறியுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஒரு அணிக்காக விளையாடும் விளையாட்டு வீரர், தன்னால் இதற்கு மேல் எதிர் அணியினரை சமாளிக்க முடியாது என்பதன் காரணமாக ஆட்டத்தில் இருந்து விலகுவது தான்vரிட்டயர்ட் அவுட் என்ற பெயர் வைக்கப் பட்டிருக்கிறது. இதற்கு முன்பு அஸ்வின் இந்த காரியத்தை செய்தார். அதன் பிறகு நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணியில் அதர்வா இவ்வாறு வெளியேறினார்.


இது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேவாக் கருத்து தெரிவித்து இருக்கிறார். குறிப்பாக ரிட்டயர் அவுட் என்பது தவறான முடிவு என்றும் அவர் கூறியிருக்கிறார். குறிப்பாக பஞ்சாப் பணியின் கேப்டனாக இருக்கும் அதர்வாவை முன்கூட்டியே ரிட்டர் ஆகி வரச் சொல்லி இருந்தால் இந்த பிரச்சனை இருந்திருக்காது என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். 42 பந்துகளில் 70 ரன்கள் அடித்திருந்தால் நிச்சயம் பஞ்சாப் அணி வெற்றி பெற்று இருக்கும். ஆனால் அந்த வாய்ப்பை மற்றொரு வீரருக்கும் தராமல் பாதியில் அணியில் இருந்து செல்வது தவறானது.


ரிட்டயர்டு அவுட் ஆவதை விட ரிட்டயர்ட் ஆவது தான் மேல். பல்வேறு அணியின் கேப்டன்கள் ரிட்டயர் அவுட் ஆவதை தொடர்ச்சியான வண்ணம் செய்து வருகிறார்கள் அது முற்றிலும் தவறானது என்று குறிப்பிட்டு இருக்கிறார். நீங்கள் ரிட்டயர்ட் ஹர்ட் வாங்கினால், உங்களால் களத்தில் இருந்து பேட்டிங் செய்ய முடியும் ஆனால் ரிட்டயர் அவுட் வாங்குவதற்கு மூலமாக உங்களால் தொடர்ந்து விளையாட முடியாது என்று கூறி இருக்கிறார்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News