Kathir News
Begin typing your search above and press return to search.

IPL வரலாற்றில் இதுதான் முதல் முறை: தொடர்ந்து நீடிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி!

ஐ.பி.எல் வரலாற்றில் அதிக முறை 200 ரன்களை எடுத்த ஒரே அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் இருக்கிறது.

IPL வரலாற்றில் இதுதான் முதல் முறை: தொடர்ந்து நீடிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  5 April 2023 1:30 AM GMT

16வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் தற்போது சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தற்போது விளையாடி வருகிறார்கள். இதில் நேற்றைய ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் ஸ்டேடியத்தில் அரங்கேறிய ஆறாவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ அணிகள் மோதிக்கொண்டன. இதில் சென்னை கேப்டன் டோனி கால் பதிந்த போது ரசிகர்களின் உற்சாக குரல் விண்ணை பிளந்தது.


குறிப்பாக டாஸ்க் ஜெயித்த லக்னோ கேப்டன் முதலில் சென்னையை பேட்டிங் செய்ய வேண்டும் என்று சொன்னார். குறிப்பாக சென்னை அணி தன்னுடைய பேட்டிங்கில் சிறப்பாக திறமையை வெளிப்படுத்துகிறது. இந்த ஒரு ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் தன்னுடைய முதல் வெற்றியை உறுதிப்படுத்தி இருக்கிறது. மேலும் ஐ.பி.எல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை 200 ரன்களுக்கு மேல் எடுத்த ஒரே அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியாக இருக்கிறது.


ஏனெனில் நேற்றைய ஆட்டத்தில் சென்னை அணி 24 வது முறை 200 ரன்களுக்கு மேல் எடுத்து இருக்கிறது. இதற்கு அடுத்த இடத்தில் பெங்களூரு அணி இருக்கிறது, பெங்களூர் அணி 22 முறை 200 ரன்களுக்கு மேல எடுத்து இருக்கிறது. 12 ரன்கள் எடுத்து சென்னை கேப்டன் டோனி ஐ.பி.எல் கிரிக்கெட்டில் ஐந்தாயிரம் ரன்களை கடந்து இருக்கிறார். அவர் 236 ஆட்டங்களில் ஆடி 24 அரைசதம் உள்ளிட்ட 5004 ரன்கள் குவித்து இருக்கிறார்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News