Kathir News
Begin typing your search above and press return to search.

இதுதான் தோனிக்கு கடைசி ஆட்டம் அடித்து கூறும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கையிப்..

2023 ஐபிஎல் தொடர் தான் எம்.எஸ்.தோனி அவர்களின் கடைசி ஆட்டமாக இருக்கும்.

இதுதான் தோனிக்கு கடைசி ஆட்டம் அடித்து கூறும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கையிப்..

Bharathi LathaBy : Bharathi Latha

  |  18 May 2023 1:00 AM GMT

சென்னை அணிக்கு பிளே ஆப் சுற்றில் விளையாடுவதற்கு வாய்ப்பு உருவாகும். அது தான் எம்.எஸ் தோனி அவர்களை பார்ப்பதற்கு இது ரசிகர்களுக்கு கடைசி வாய்ப்பாக இருக்கும். ஏனென்றால் இதுதான் அவர் விளையாடும் ஐபிஎல் தொடருக்கான கடைசி போட்டி என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் கூறியிருக்கிறார். இந்த ஒரு தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.


இதன் மூலம் அவர்களுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு உறுதியாகிவிட்டது. இந்த நிலையில் சென்னை அணி தற்போது 13 போட்டிகளில் விளையாடி 15 புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. இதனால் கடைசி போட்டியில் விளையாட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. சென்னை ரசிகர்களுக்கு தோனியை பார்க்க கடைசி வாய்ப்பாக இது அமைகிறது. ஏனென்றால் எம் எஸ் தோனி அவர்களுக்கு 41 வயதாகிவிட்டது. இதன் காரணமாக இவர் அடுத்த ஐபில் தொடரில் இடம் பெறுவது என்பது சற்று கடினம் தான்.


இந்த நிலையில் தோனியின் ஓய்வு குறித்து பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரர் முஹம்மது கையிப், ஐ பி எல் கிரிக்கெட்டில் இதுதான் தோனிக்கு கடைசி ஆண்டு என்று கூறினார்.இது பற்றி குறிப்பாக பேசிய அவர் தோனி அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார் என்று நான் நினைக்கிறேன் என்று அவர் குறிப்பிட்டு இருந்தார். இதற்காக பல்வேறு மறைமுக விஷயங்களை தோனி ரசிகர்களுக்கு வெளிப்படுத்தி இருக்கிறார், இதுதான் கடைசி சீசன் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News