Kathir News
Begin typing your search above and press return to search.

இதுதான் நான் செய்த தவறு... CSK வீரர் பகிர்ந்து கொண்ட தகவல்!

என்னுடைய லைப்பில் நான் செய்த தவறு இது தான் என சிஎஸ்கே வீரர் பகிர்ந்து கொண்ட தகவல் எது?

இதுதான் நான் செய்த தவறு... CSK வீரர் பகிர்ந்து கொண்ட தகவல்!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  22 May 2023 2:55 AM GMT

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன்னுடைய அபாரமான திறமைகளை வெளிப்பாட்டு வருகிறது. அந்த வகையில், டெல்லிக்கு எதிரான ஆட்டத்தின் போது நான்கு ஓவர்களில் வீசிய தீபக் சாகர் 22 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை அருமையாக வீழ்த்தி இருக்கிறார். ஏற்கனவே இவருக்கு அடிபட்டு காயம் ஏற்பட்டு இருக்கிறது. அது கூட பொருட்படுத்தாமல் முழுமையாக கிரிக்கெட்டில் தன்னை ஈடுபடுத்தி இருக்கிறார்.


தன்னுடைய காயத்தை கூட பெரிது படுத்தாமல் நான் அணிக்காக விளையாடுகிறேன். அதனால் நாங்கள் முழுமையான வெற்றியை தற்பொழுது பெற்று இருக்கிறோம் என்று ஒரு பேட்டியின்போது அவர் குறிப்பிட்டு இருக்கிறார். பிறகு பேசிய தீபக்சாகர் இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் முக்கியமானது. இந்த முடிவை தான் நாங்கள் எதிர்பார்த்தோம். எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.


இந்த ஆடுகளத்தில் 160 ரன்கள் எடுத்தால் போதுமானது என்று தான் நான் நினைத்தேன். ஆனால் 220 ரன்களுக்கு மேல் நாங்கள் அடித்து சிறப்பான பணியை செய்தார்கள். சென்னை ஆடுகளத்தைப் பொறுத்தவரை வெப்பம் அதிகமாக இருக்கும் எனவே பேட்ஸ்மேன் அதிகளவு வியர்வை காரணமாக அவர்களால் பந்தை சரியாக போட முடியாது. ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் கச்சிதமாக விளையாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டு இருக்கிறார்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News