Kathir News
Begin typing your search above and press return to search.

IPL போட்டியில் வெற்றி பெற இவர்கள் தான் காரணம்: புகழ்ந்து தள்ளிய கேப்டன்?

டெல்லி அணிக்கு எதிராக லக்னோ அணி அபார வெற்றி பெற்றதற்கு இந்த இரண்டு வீரர்கள் தான் காரணம்.

IPL போட்டியில் வெற்றி பெற இவர்கள் தான் காரணம்: புகழ்ந்து தள்ளிய கேப்டன்?

Bharathi LathaBy : Bharathi Latha

  |  3 April 2023 12:30 AM GMT

டெல்லி அணிக்கு எதிராக போட்டியில் லக்னோ அணி 50 ரன்கள் பிரயாசத்தில் அபாரமான வெற்றியை தற்பொழுது பதிவு செய்து இருக்கிறது. குறிப்பாக ரிஷப் பண்ட் இல்லை என்றாலும் வலிமையாக கருதப்பட்ட டெல்லி அணி மீது பேட்டிங் மற்றும் பௌலிங் என்ற இரண்டிலும் லக்னோ அணி அதிகமாக ஆதிக்கம் செலுத்தியது. அது மட்டுமல்லாமல் ஐ.பி.எல் தொடரில் சொந்த மண்ணில் ஆடப்படும் ஆட்டங்களில் அந்தந்த அணிகள் கண்டிப்பாக வெற்றி பெறும் சென்னை அணி எல்லாம் சேப்பாக்கத்தை தனது கோட்டையாக வைத்துள்ளது.


ஆனால் லக்னோ அணி தனது சொந்த மண்ணில் நேற்று தான் முதல் ஆட்டத்தை களம் இறங்கியது. அது மட்டுமல்லாது ரன்கள் குவிப்பதற்கு ஏதுவாக அந்த மைதானம் இல்லை என்றாலும் 193 ரன்கள் குவித்து 5 ஓவர்களில் லக்னோ அணியால் 25 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. ஆனால் லக்னோ தொடக்க வீரர் கைல்மேயர் ஸ்பின்னர்களை அட்டகாசமாக செய்ததை யாரும் எதிர்பார்க்கவில்லை. அக்சர் பட்டேல் மற்றும் யாதவ் ஆகியோர் சிக்சர்களை அடித்துக் கொண்டே இருந்தார்கள்.


எனவே லக்னோ அணி கேப்டன் ராகுல் பேசுகையில், தெளிவு எதுவும் இல்லாமல் தான் எங்கள் அணி இருந்தது. ஆனால் டெல்லி அணிக்கு எதிராக வெற்றியின் மூலம் தற்பொழுது புது நம்பிக்கை கிடைத்து இருப்பதாக அவர் தெரிவித்து இருக்கிறார். டாஸ்க் நம் கையில் இல்லை என்றாலும் வீரர்களின் அற்புதமான திறமைகள் காரணமாக கூடுதலான ரன்களை எடுக்க முடியும் என்று அவர் நினைப்பதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News