Kathir News
Begin typing your search above and press return to search.

புதிய விதிமுறைகள் IPL கிரிக்கெட்டில் நடந்த மாற்றம்... இந்திய வீரர்கள் மிகுந்த மகிழ்ச்சி!

புதிய நடைமுறை விதிகள் காரணமாக இந்திய வீரர்கள் IPL கிரிக்கெட் தொடரில் பயனடைந்து இருக்கிறார்கள்.

புதிய விதிமுறைகள் IPL கிரிக்கெட்டில் நடந்த மாற்றம்... இந்திய வீரர்கள் மிகுந்த மகிழ்ச்சி!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  21 April 2023 2:09 AM GMT

தற்போது 16 வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் சிறப்பாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் தற்பொழுது கிரிக்கெட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர் என்று புதிய விதிமுறை அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன்படி ஒரு இன்னிங்ஸ் பாதையில் ஒரு வீரரை வெளியேற்றி விட்டு, அவருக்கு பதிலாக மாற்று வீரர் ஒருவரை சேர்க்க முடியும். அவர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சும் செய்யலாம் என்று கூடுதலான சலுகையும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த நாள் இரண்டாவது பேட்டிங் செய்யும் அணியினர் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனையும் பந்து வீச அணியும் கூடுதலாக ஒரு பந்துவீச்சாளரையும் சேர்த்துக் கொள்கிறார்கள்.


புதிய விதியினால் இப்போது நாம் 11 வீரர்களுக்கு பதிலாக 12 வீரர்களுடன் விளையாடுவது போல் உணர்கிறோம். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் கூறுகிறார், எப்படியும் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் வந்து விடுவதால் வழக்கத்தைவிட 15 ரன்கள் அதிகமாக எடுக்க வேண்டிய அவசியமாகிறது என்று கூறி இருக்கிறார். மேலும் பெங்களூரு கேப்டன் இது பற்றி கூறுகையில், இன்னொரு பக்கம் தாக்கத்தை ஏற்படுத்தும் விதி யினால் இந்திய வீரர்களுக்கு ஒரு சிறந்த பலன் கிடைத்து இருக்கிறது.


இந்த சீசனின் முதல் 24 ஆட்டத்தில் 10 முறைகளையும் சேர்த்து மொத்தம் 107 இந்திய வீரர்கள் களமிருக்கிறார்கள். இதுவே 2022 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடர் 24 ஆட்டங்களில் பயன்படுத்தப்பட்ட இந்திய வீரர்களின் எண்ணிக்கை 91 தான். தற்பொழுது அது முந்தைய ஆண்டை விட கூடுதலாக இருந்து இருக்கிறது. பெரும்பாலும் இந்த அணி விதிமுறைகள் காரணமாக இந்தியர்களை அதிகமாக பயனடைகிறார்கள். குறிப்பாக இளம் வீரர்களுக்கு ஜாக்பாட் அடித்தது போல் உணர்கிறார்கள்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News