Kathir News
Begin typing your search above and press return to search.

ஐ.பி.எல் ஏலம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது ஐ.பி.எல் நீர்வாகம்!

ஐ.பி.எல் ஏலம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது ஐ.பி.எல் நீர்வாகம்!

ஐ.பி.எல் ஏலம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது ஐ.பி.எல் நீர்வாகம்!

Pravin kumarBy : Pravin kumar

  |  27 Jan 2021 5:42 PM GMT

ஐபிஎல் 2021 ஆம் ஆண்டுக்கான தொடரின் விறுவிறுப்பு அதிகரித்துள்ளது. 2020 ஐபிஎல் தொடரில் முடிவடைந்து மூன்று மாதங்கள் தான் ஆகியுள்ள நிலையில் அடுத்த ஐபிஎல் தொடரின் ஏற்பாடுகள் சிறப்பாக தொடங்கி உள்ளது. ஐபிஎல் 2021 தொடருக்கான ஏலம் பிப்ரவரி மாதம் நடைபெறும் என சொல்லப்பட்டு வந்த நிலையில் ஐபிஎல் நிர்வாகம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


அந்த அறிவிப்பின் படி வருகின்ற பிப்ரவரி 18ம் தேதி சென்னையில் இந்தாண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து ஐபிஎல் ஏலத்துக்கான வீரர்கள் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என தெரிகின்றது. அனைத்து ஐபிஎல் அணிகளும் ஐபிஎல் ஏலத்துக்காக தயார் நிலையில் உள்ளன. ஏற்கனவே ஐனவரி 20ம் தேதி ஐபிஎல் அணிகள் தங்கள் அணியில் தேவையில்லாத வீரர்களை அணியில் இருந்து விலக்கிய நிலையில் புதிய வீரர்களை அணியில் சேர்க்க புதிய திட்டங்களை வகுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஏலம் குறித்து இன்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை அணியை பொறுத்த வரையில் ஒரு வெளிநாட்டு வீரரை தான் எடுக்க முடியும் என்பதால் மிகுந்த எதிர்பாரப்பு எழுந்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News