Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தாண்டு ஐ.பி.எல் தொடர் இந்த மைதானங்களில் தான் நடைபெற உள்ளதா?

இந்தாண்டு ஐ.பி.எல் தொடர் இந்த மைதானங்களில் தான் நடைபெற உள்ளதா?

இந்தாண்டு ஐ.பி.எல் தொடர் இந்த மைதானங்களில் தான் நடைபெற உள்ளதா?
X

Pravin kumarBy : Pravin kumar

  |  31 Jan 2021 3:50 PM IST

ஐபிஎல் தொடர் இந்தாண்டு இந்தியாவில் நடைபெறுமா என்ற கேள்வி அனைவரும் மத்தியிலும் இருந்து வந்த நிலையில் இந்தாண்டு ஐபிஎல் தொடர் இந்தியாவில் தான் நடைபெறும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. ஆனால் 87 ஆண்டுகளாக நடைபெற்று வந்த ரஞ்சி கோப்பை தொடர் இந்த ஆண்டு நடைபெறாது என அறிவித்துள்ளது.

ஐபிஎல் தொடர் வழக்கம் போல் எட்டு அணிகளின் தலைநகரங்களில் நடத்தப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தாண்டு ஐபிஎல் தொடர் மும்பை மற்றும் புனே மைதானங்களில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. மும்பையில் உள்ள வான்கடே, ப்ராபோன்ஸ் மைதானம், டிஒய் படில் மைதானம் மற்றும் ரிலையான்ஸ் ஆகிய நான்கு மைதானங்களும் புனே மைதானத்திலும் ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளன.

இவை அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை என்றாலும் இதை தான் பிசிசிஐ ஆலோசித்து வருகின்றது. இந்தாண்டு ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் மற்றும் மே ஆகிய இரண்டு மாதங்கள் நடைபெற உள்ளன. இந்தாண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் வரும் 18 ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News