Kathir News
Begin typing your search above and press return to search.

உலக சாதனையைத் தொடர்ந்து மீண்டும் மற்றொரு பெரிய சாதனை நிகழ்த்திய இந்திய வீரர்!

உலக சாதனை உடன் தற்பொழுது மீண்டும் சதம் விலாசி அசத்தியிருக்கிறார் இந்திய கிரிக்கெட் வீரர் இஷான் கிஷன்.

உலக சாதனையைத் தொடர்ந்து மீண்டும் மற்றொரு பெரிய சாதனை நிகழ்த்திய இந்திய வீரர்!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  17 Dec 2022 4:12 AM GMT

வங்காளதேசத்திற்கு எதிராக மூன்றாவது ஒருநாள் போட்டியில் அதிவேக இரட்டை சதம் அடித்து இஷான் கிஷன் சாதனை படைத்து ஐந்து நாட்கள் கூட இன்னும் கடக்கவில்லை. ஆனால் டெஸ்ட் தொடரில் இடம் பெறாத இஷான் தனது ஓய்வு நேரத்தில் கூட ரஞ்சித் போட்டியில் விளையாட முடிவெடுத்து இருக்கிறார். இந்த நிலையில் கேரளவிற்கு எதிரான முதல் ஆட்டத்தில் ஜார்கண்ட் அணிக்காக இஷான் விளையாடினார். முதல் பேட்டிங் செய்த கேரள அணி அதிரடியாக விளையாடி 475 ரன்கள் கொடுத்தது.


அதனைத் தொடர்ந்து சந்திரன் 155 ரன்கள், ஜோசப் 83 ரன்களையும் பெற்றிருக்கிறார்கள். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் சஞ்சு 108 பந்துகளை அடித்து 72 ரன்கள் அடித்தார். மூன்று ஆண்டுகளுக்கு பிறகு சஞ்சு ரஞ்சிக்கோப்பை விளையாடியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. அடுத்த வீரராக களம் இறங்கிய இஷான் கீசன் வழக்கம்போல் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.


முதலில் கொஞ்சம் பொறுமையாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்ட அவர் பின்னர் பவுன் பவுண்டரிகளை விரட்டினார். இதன் மூலம் 195 ரன்கள் பிடித்த இஷான் 132 ரன்கள் ஆட்டம் இழந்தார். ஒன்பது சிச்லர் அடங்கும். ரஞ்சித் கிரிக்கெட் கோப்பை வரலாற்றில் அவர் அடித்த ஆறாவது சதம் இதுவாகும். இதனால் இது ரசிகர்களுக்கு இடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் தான் அடுத்து வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News