Kathir News
Begin typing your search above and press return to search.

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி: கோப்பையை தட்டித்தூக்கிய ஐதராபாத்!

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி: கோப்பையை தட்டித்தூக்கிய ஐதராபாத்!

ThangaveluBy : Thangavelu

  |  21 March 2022 10:59 AM GMT

கோவாவில் நடைபெற்ற இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து இறுதி போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி, ஐதராபாத் எப்சி. அணியுன் மோதியது.

இப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், முதல் பாதி ஆட்டத்தில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இரண்டாவது பாதியில் கேரள வீரர் ராகுல் 68வது நிமிடத்திலும், ஐதராபாத் வீரர் சஹில் தவோரா 88வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இதனை தொடர்ந்து 11 என்கின்ற கோல் கணக்கில் ஆட்டம் சமனில் முடிவுற்றது. கூடுதலாக 30 நிமிடம் ஒதுக்கப்பட்ட நிலையில் இரண்டு அணியும் கோல் அடிக்கவில்லை.

இதனை தொடர்நாது வெற்றி, தோல்வியை நிர்ணயம் செய்ய பெனால்டி ஷூட்அவுட் முறை பின்பற்றப்பட்டது. இதில் ஐதராபாத் அணி 31 என்கின்ற கணக்கில் கேரளாவை தோற்கடித்தது. இதனால் முதன் முறையாக ஐ.எஸ்.எல். சாம்பியன் கோப்பையை தட்டித் தூக்கியது.

Source: Maalaimalar

Image Courtesy: Times Of India

Next Story
கதிர் தொகுப்பு
Trending News