Kathir News
Begin typing your search above and press return to search.

மைதானத்தில் புகைப்பிடித்த ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்: இணையத்தில் வைரலான புகைப்படம்!

வங்காளதேசத்தில் நடைபெற்று வரும் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் போது கொமிலா விக்டோரியன்ஸ் மற்றும் மினிஸ்டர் குரூப் டாக்கா இடையிலான ஆட்டம் மழையால் நின்றது.

மைதானத்தில் புகைப்பிடித்த ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்: இணையத்தில் வைரலான புகைப்படம்!

ThangaveluBy : Thangavelu

  |  6 Feb 2022 7:10 AM GMT

வங்காளதேசத்தில் நடைபெற்று வரும் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் போது கொமிலா விக்டோரியன்ஸ் மற்றும் மினிஸ்டர் குரூப் டாக்கா இடையிலான ஆட்டம் மழையால் நின்றது.

அந்த சமயத்தில் மைதானத்தில் இருந்த சில வீரர்களில் ஆப்கானிஸ்தான் வீரர் முகமது ஷாஜாத் புகைப்பிடித்துள்ளார். இது பற்றிய புகைப்படங்கள் இணைத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மைதானத்தில் புகைப்பிடித்த போது மூத்த வீரரான தமிம் இக்பால் முகமது ஷாஜாத்தை எச்சரித்துள்ளார். இது போன்று மைதானத்தில் நடந்து கொள்வது சரியில்லை. உடனடியாக டிரஸ்ஸிங் ரூமுக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வெளியானதால் தற்போது கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது. மேலும், போட்டியை நடத்தும் அதிகாரிகளும் முகமது ஷாஜாதிற்கு கண்டனத்தை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Maalaimalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News