Kathir News
Begin typing your search above and press return to search.

ஒரு ஆண்டில் அதிக சிக்ஸர்கள் கிரிக்கெட் போட்டியில் சூர்யகுமார் புதிய சாதனை!

ஒரு ஆண்டில் அதிக சிக்ஸர்கள் பெயர்களை எடுத்து சூரியகுமார் யாதவ் புதிய சாதனை.

ஒரு ஆண்டில் அதிக சிக்ஸர்கள் கிரிக்கெட் போட்டியில் சூர்யகுமார் புதிய சாதனை!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  30 Sep 2022 1:00 PM GMT

திருவனந்தபுரத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் நான்காவது வரிசையில் களம் கண்ட இந்திய வீரரான சூரிய குமார் யாதவ் 33 பந்துகளில், 5 பவுண்டரி, மூன்று சிக்சர் மற்றும் 50 ரன்கள் விலாசி ஆட்டத்தின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.


கடைசிவரை நிலைத்து நின்று அசைத்திய சூரியகுமார் யாதவ் சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் ஒரு ஆண்டில் அதிக ரன்கள் குறித்த இந்திய வீரர் என்று பெருமையை தற்போது பெற்றுள்ளார். இந்த ஆண்டில் இதுவரை 732 ரன்கள் எடுத்து ஆட்டங்களை இந்தியாவின் வெற்றிக்கு தேடி தந்தார். இதற்கு முன்பு இந்திய வீரர் ஷிகர் தவான் 2018 ஆம் ஆண்டு 689 ரன்கள் எடுத்தது அதிகபட்சமாக இருந்தது. அந்த சாதனையை தற்போது சூரியகுமார் யாதவ் தகர்த்தெறிந்தார்.


அத்துடன் சர்வதேச 20 ஓவர் போட்டியில் ஒரு ஆண்டில் அதிக சிக்ஸர்களை எடுத்த வீரர் என்று மகத்தான சாதனையும் சூரியகுமார் யாதவ் தனக்கு சொந்தமாக்கி இருக்கிறார். அவர் இந்த ஆண்டில் இதுவரை 45 சிக்ஸர்களை விளாசி இருக்கிறார். இதற்கு முன்பு கடந்த ஆண்டு பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் முகமது ரிஷ்வான் 42 சிக்கல விரட்டியதை சாதனையாக இருந்தது. அந்த சாதனையும் சூரியகுமார் தனது 21வது இன்னிங்ஸிலேயே முடிவெடுத்து இருக்கிறார். மும்பையில் சேர்ந்து 32 வயதான சூரியகுமார் யாதவ் 20 பேட்மேன் தரவரிசையில் இரண்டாம் இடத்தை பிடித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கதும்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News