Kathir News
Begin typing your search above and press return to search.

சி.எஸ்.கே. அணியின் கேப்டன் பதவியில் இருந்து டோனி விலகல்!

சி.எஸ்.கே. அணியின் கேப்டன் பதவியில் இருந்து டோனி விலகல்!

ThangaveluBy : Thangavelu

  |  24 March 2022 12:08 PM GMT

ஐபிஎல் 2022 மெகா ஏலத்திற்கு முன்னர் அணி வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். அந்த சமயத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 வீரர்களை மட்டும் தக்க வைத்திருந்தது. அதில் ஜடேவாவை தக்க வைத்திருந்தது. மேலும், டோனி கேப்டன் பதவியில் நீடிப்பாரா என்பன கேள்விகளும் எழுந்தது.

அந்த சமயத்தில் சிஎஸ்கே அணி நிர்வாகம் டோனியே மீண்டும் கேப்டனாக செயல்படுவார் என்று கூறியிருந்தது. வருகின்ற 26ம் தேதி 2022 சீசன் தொடங்க இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இன்று டோனி சிஎஸ்கே அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகியிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை அந்த அணியின் நிர்வாகமும் உறுதிப்படுத்தியுள்ளது. அதே சமயம் ஜடேஜா கேப்டனாக செயல்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இருந்தாலும் டோனி கேப்டன் பதவியில் இருந்து விலகினாலும் தொடர்ந்து சிஎஸ்கே அணிக்காக விளையாடுவார் என கூறப்பட்டுள்ளது.

Source: Maalaimalar

Image Courtesy: The Economics Times

Next Story
கதிர் தொகுப்பு
Trending News