Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழ்நாடு, கர்நாடகா கிரிக்கெட் போட்டியை ரசித்து பார்த்த டோனி!

சையது முஸ்தாக் அலி கோப்பைக்கான இறுதி ஆட்டம் நேற்று (நவம்பர் 22) டெல்லியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா அணிகள் மோதியது. முதலில் டாஸ் வெற்றி பெற்ற தமிழக அணி கேப்டன் விஜய் சங்கர் பந்துவீச்சை தேர்வு செய்திருந்தார்.

தமிழ்நாடு, கர்நாடகா கிரிக்கெட் போட்டியை ரசித்து பார்த்த டோனி!

ThangaveluBy : Thangavelu

  |  23 Nov 2021 11:25 AM GMT

சையது முஸ்தாக் அலி கோப்பைக்கான இறுதி ஆட்டம் நேற்று (நவம்பர் 22) டெல்லியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா அணிகள் மோதியது. முதலில் டாஸ் வெற்றி பெற்ற தமிழக அணி கேப்டன் விஜய் சங்கர் பந்துவீச்சை தேர்வு செய்திருந்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த கர்நாடகா அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்களை குவித்தது. மனோகர் அதிகமாக 46 ரன்களை குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போன்று சாய் கிஷோர் 3 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்தார். இதனிடையே 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழக அணி களமிறங்கியது. இதில் ஜெகதீசன் 41 ரன்னும், ஷரி நிஷாந்த் 23 ரன்களை எடுத்து வெளியேறினர்.

அதே போன்று இறுதிக் கட்டத்தை எட்டிய நிலையில் ஷாருக்கான் தமிழக அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார். அதாவது கடைசி ஓவரில் கடைசி பந்தில் 5 ரன்கள் எடுத்தால் மட்டுமே வெற்றி என்று இருந்தது. இதனிடையே கடைசி பந்தில் சிக்சர் அடித்து தமிழக அணியை வெற்றி பெறச் செய்தார். இதனால் ரசிகர்களுக்கு கடைசி பந்தை ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கடைசி பந்தில் ஷாருக்கான் சிக்சர் அடித்ததை இந்திய முன்னாள் கேப்டன் ரசித்துப் பார்த்தார். அதன் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. இந்திய அணிக்காக பல முறை கடைசி பந்தில் சிக்சர் அடித்து வெற்றி பெற செய்துள்ளார். தற்போது தமிழ்நாடு, கர்நாடகா அணியின் விளையாடியதை ஆவலுடன் பார்த்து ரசித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Maalaimalar

Image Courtesy: India.Com


Next Story
கதிர் தொகுப்பு
Trending News