Kathir News
Begin typing your search above and press return to search.

இந்த ஐபிஎல் தொடரில் புதிதாக மும்பை இன்டியன்ஸ் அணியில் இணையும் நியூசிலாந்து அதிரடி வீரர்கள்.!

இந்த ஐபிஎல் தொடரில் புதிதாக மும்பை இன்டியன்ஸ் அணியில் இணையும் நியூசிலாந்து அதிரடி வீரர்கள்.!

இந்த ஐபிஎல் தொடரில் புதிதாக மும்பை இன்டியன்ஸ் அணியில் இணையும் நியூசிலாந்து அதிரடி வீரர்கள்.!

Pravin kumarBy : Pravin kumar

  |  21 Feb 2021 4:42 PM GMT

ஐபிஎல் 14 வது சீசனுக்கான ஐபிஎல் ஏலம் கடந்த 18ம் தேதி சென்னையில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் மொத்தமாக 292 வீரர்களின் பெயர்கள் தேர்வு செய்யப்பட்டு ஏலத்தில் கலந்து கொண்டனர். அதில் 57 வீரர்களை 8 ஐபிஎல் அணிகள் தேர்வு செய்தது. இதில் 22 வெளிநாட்டு வீரர்களும் 29 இந்திய அணியில் இடம்பெறாத இளம் வீரர்களும் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். இந்நிலையில் ஐபிஎல் தொடர்களில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற மூம்பை இன்டியன்ஸ் அணி இந்த ஐபிஎல் ஏலத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் அதிக அளவில் வெளிநாட்டு வீரர்களை அணியில் இணைத்துள்ளது.

மும்பை இன்டியன்ஸ் அணியில் நியூசிலாந்து அணியின் ஆடம் மில்னே 3.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. அவரை தொடர்ந்து இந்திய வீரர் பிவ்வு சாவ்லா 2 கோடிக்கு மும்பை அணி வாங்கிய நிலையில் மீண்டம் ஆஸ்திரேலியா வீரர் குல்டர் நைல் ஐ மும்பை அணி ஏலத்தில் எடுத்தது.

அவரை தொடர்ந்து நியூசிலாந்து அணியின் ஜிம்மி நீசம் 50 லட்சத்திற்கும் இந்திய இளம் வீரர் சராக் 20 லட்சத்திற்கும் அர்ஜன் டெண்டுல்கர் 20 லட்சத்திற்கும் ஏலத்தில் எடுத்தது. மும்பை இன்டியன்ஸ் அணியில் ஏற்கனவே முக்கியமான அனைத்து வீரர்களையும் தக்கவைத்த நிலையில் இந்த ஏலம் மும்அபை அணியில் மேலும் பல முக்கியமான வீரர்களை இணைத்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News