Kathir News
Begin typing your search above and press return to search.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்த ஜெய்ஷா.. பின்னணி காரணம் என்ன..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்த ஜெய்ஷா.. பின்னணி காரணம் என்ன..

Bharathi LathaBy : Bharathi Latha

  |  20 Sep 2023 11:58 PM GMT

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் வெகு விமர்சையாக தொடங்கப்பட இருக்கிறது. குறிப்பாக அக்டோபர் மாதம் தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை இந்த ஒரு போட்டி இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இந்தத் தொடருக்கான ஆயத்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ரஜினிகாந்தை ஜெய்ஷாவை சந்தித்திருக்கிறார். மேலும் உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் வாரியம் செய்த ஏற்பாடு தான் இது என்று செய்திகள் வெளியாகி இருக்கிறது.


அதாவது இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பை தொடரில் சிறப்பு அழைப்பாளராக அழைத்து எந்தவித பணமும் செலுத்தாமல் அனைத்து போட்டிகளையும் பார்க்கும் வசதி உடைய கோல்டன் டிக்கெட்டுகள் இந்தியாவில் உள்ள பிரபலங்களுக்கு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு சினிமா பிரபலங்களுக்கும் இந்த ஒரு டிக்கெட் இந்திய கிரிக்கெட் கவுன்சில் வாரியம் மூலமாக வழங்கப்படுகிறது.


நடிகர் அமிதாப் பச்சன், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோருக்கு இந்த டிக்கெட் தற்போது வழங்கப்பட்டது. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கும் இந்த ஒரு கவுரவம் அளிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக தான் தற்பொழுது பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா அவர்கள் நேரடியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை சந்தித்து கோல்டன் டிக்கெட்டை கொடுத்து இருக்கிறார்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News