Kathir News
Begin typing your search above and press return to search.

இந்திய கேப்டன் அபாயகரமான பேட்ஸ்மேன்.. சொல்கிறார் பாகிஸ்தான் துணை கேப்டன்..

இந்திய கேப்டன் அபாயகரமான பேட்ஸ்மேன்.. சொல்கிறார் பாகிஸ்தான் துணை கேப்டன்..

Bharathi LathaBy : Bharathi Latha

  |  3 Oct 2023 3:04 AM GMT

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக இந்தியா வந்துள்ள பாகிஸ்தானில் தற்போது முழுமையாக பயிற்சி ஆட்டத்தில் கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக அவர்கள் தீவிரமாக இந்த முறை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் துணை கேப்டன் சுழற் பந்து வீச்சாளருமான சாதப் கான் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்று அளித்து இருக்கிறார்.


அப்பொழுது அவர் கூறும் பொழுது, உலக கோப்பை கிரிக்கெட் பாகிஸ்தான் இந்தியா மோதலுக்கு இன்னும் பல நாட்கள் இருக்கிறது. அதற்கு முன்பாக எங்களுக்கு ஒரு பயிற்சி ஆட்டம் இருக்கிறது. உலக கோப்பையில் இரு ஆட்டங்கள் உள்ளன எந்த அணி வந்து வீட்டில் அசத்துகிறதோ அந்த அணியை உலக கோப்பையை வெல்லும் என்பது எனது நம்பிக்கை. ஏனெனில் இந்திய ஆடுகளங்கள் பேட்ஸ்மேன் உங்களுக்கு சாதகமானவை ஒன்று தூரமும் குறைவு.


இந்த நிலையில் பேட்ஸ்மேன்களின் ரன் குவிப்பை கட்டுப்படுத்துவதும் விக்கெட் வீழ்த்துவதும் கடினம். பேட்டிங்கை பொறுத்த வரை இந்தியாவின் கேப்டன் ரோகித் சர்மா மிகச்சிறந்த வீரர் என்று அவர் சொல்கிறார். அவர் களத்தில் நிலைத்து விட்டால் அபாயகரமாக மாறிவிடுவார். அதன் பிறகு அவரை வீழ்த்துவது கடினம் ஆகிவிடும் பவுலர்கள் நிலைமை பரிதாபமாக இருக்கும். இவ்வாறு தன்னுடைய கருத்துக்களை அவர் தெரிவித்து இருக்கிறார்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News