Kathir News
Begin typing your search above and press return to search.

ரிஷப் பண்ட்க்கு என்ன ஆனது? இந்திய அணியின் அடுத்த விக்கெட் கீப்பர் யார்?

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் பங்கேற்க மாட்டார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

ரிஷப் பண்ட்க்கு என்ன ஆனது? இந்திய அணியின் அடுத்த விக்கெட் கீப்பர் யார்?

Bharathi LathaBy : Bharathi Latha

  |  1 Jan 2023 2:05 PM GMT

பிப்ரவரி மாதம் இந்தியா முழுவதும் ஆஸ்திரேலியா அணி நான்கு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கு இருக்கிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே முதலாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 9ஆம் தேதி நாக்பூரில் தொடங்குகிறது. இந்த ஒரு நிலையில் தான் சாலை விபத்தில் சிக்கி கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பரான ரிஷப் பலத்த காயத்தை அனுபவித்தார்.


இந்த தொடரில் அவர் இருப்பாரா? என்பது கேள்விக்குறியாக தான் இருந்தது. அவர் பங்கேற்க மாட்டார் என்று அதிகாரப்பூர்வமான தகவல் வெளியிடப்பட்டு இருக்கிறது. மேல் சிகிச்சைக்காக டோராடூனில் உள்ள மருத்துவமனையில் இருந்து டெல்லி மருத்துவமனைக்கு விரைவில் மாற்றப்பட்டதாக தகவல்கள் ஏற்கனவே வெளியாகி இருந்தது. ரிஷப் நீண்ட கால சிகிச்சை தேவைப்படுவதாக அவர் பயிற்சியாளர் தெரிவித்து இருந்தார்.


காயத்தில் இருந்து அவர் முழுமையாக குணமடைய குறைந்தது மூன்று அல்லது ஆறு மாதங்கள் ஆகும் என்று மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். இந்திய அணிக்கு புதிய விக்கெட் கீப்பரை தேர்வு செய்வது குறித்து தற்போது தேர்வு கமிட்டி ஆலோசத்து வருகிறது. இரண்டு புதிய விக்கெட் கீப்பர்கள் அணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் என்று கூறப்படுகிறது.

Input & Image courtesy: Maalaimalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News