Begin typing your search above and press return to search.
ஒலிம்பிக் ஆடவர் ஆக்கி.. காலிறுதிக்கு தகுதி பெற்ற இந்தியா.!
போட்டி இறுதியில் விவேக் சாகர் அடித்த கோல் இந்திய அணியின் வெற்றியை முடிவு செய்தது. இதனால் 31 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியனான அர்ஜென்டினாவை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இதன் காரணமாக காலியுறுதிக்கு முன்னேறியுள்ளது.

By :
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 7வது நாளான இன்று ஆடவர் ஆக்கி போட்டியில் இந்தியா, அர்ஜென்டினா அணிகள் விளையாடின.
இதில் முதல் இரண்டு காலிறுதி நேரத்தில் கோல்கள் எதுவும் போடவில்லை. போட்டியின் 43வது நிமிடத்தில் இந்திய வீரர் வருண்குமார் அடித்த கோல் திருப்பு முனையை ஏற்படுத்தியது. இதனையடுத்து இரண்டு தரப்பிலும் கோல்கள் எதுவும் விழாத நிலையில், போட்டி முடியும் நேரத்தில் இந்திய அணியினர் அதிரடியாக விளையாடினார்கள்.
போட்டி இறுதியில் விவேக் சாகர் அடித்த கோல் இந்திய அணியின் வெற்றியை முடிவு செய்தது. இதனால் 31 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியனான அர்ஜென்டினாவை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இதன் காரணமாக காலியுறுதிக்கு முன்னேறியுள்ளது.
Next Story