Kathir News
Begin typing your search above and press return to search.

வெள்ளி பதக்கத்தை மத்திய அமைச்சரிடம் காண்பித்து வாழ்த்து பெற்ற மீராபாய் சானு.!

ஜப்பான் தலைநகர், டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் மகளிருக்கான பளு தூக்கும் போட்டியில் இந்தியாவை சேர்ந்த மீராபாய் சானு வெள்ளி பதக்கம் வென்று சாதித்தார்.

வெள்ளி பதக்கத்தை மத்திய அமைச்சரிடம் காண்பித்து வாழ்த்து பெற்ற மீராபாய் சானு.!

ThangaveluBy : Thangavelu

  |  27 July 2021 3:37 AM GMT

ஜப்பான் தலைநகர், டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் மகளிருக்கான பளு தூக்கும் போட்டியில் இந்தியாவை சேர்ந்த மீராபாய் சானு வெள்ளி பதக்கம் வென்று சாதித்தார்.

ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் வெற்றி பெற்று தந்த இவருக்கு பிரதமர் மோடி மற்றும் மணிப்பூர் மாநில முதலமைச்சர் பிரேன் சிங், மத்திய அமைச்சர்கள் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.


இந்நிலையில், ஜப்பானில் இருந்து நேற்று தாயகம் திரும்பிய மீராபாய் சானுக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன் பின்னர் அவர் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடித்தார். அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

இதனிடையே தான் வெற்றி பெற்ற வெள்ளி பதக்கத்தை மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூர் மற்றும் மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News