Kathir News
Begin typing your search above and press return to search.

மீண்டும் தங்கம் வென்றார் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா!

மீண்டும் தங்கம் வென்றார் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா!

ThangaveluBy : Thangavelu

  |  19 Jun 2022 1:03 PM GMT

ஃபின்லாந்தில் நடைபெற்று வரும் குர்டேன் விளையாட்டுப் போட்டியில் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா மீண்டும் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

டிரினிடாட்&டொபாகோ வீரர் கேஷோர்ன் வால்காட், கிரெனடாவின் உலக சாம்பியனான ஆண்டர்சன் பீட்டர்ஸ் உள்ளிட்டோரை முறியடித்து 86.69 மீட்டர் தூரம் எறிந்து நீரஜ் சோப்ரா சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீரஜ் சோப்ரா 86.69 மீ எறிந்து அதனையடுத்து இரண்டு முறை ஃபவுல் செய்தார். அவர் மீதம் உள்ள மூன்று வீசுதல்களை முயற்சி செய்வதிலிருந்து விலகினார். இருந்தாலும் அவரது முதல் எறிதலே அவருக்கு தங்கம் பெற்றுக்கொடுக்கும் அளவுக்கு அவரது வலிமையாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Source: News 18 Tamilnadu

Image Courtesy: The Indian Express

Next Story
கதிர் தொகுப்பு
Trending News