Kathir News
Begin typing your search above and press return to search.

பாராலிம்பிக்கில் கடின உழைப்பால் கிடைத்த வெள்ளி ! - பிரவீன்குமாரை பாராட்டிய பிரதமர் மோடி!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடந்த உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் பிரவீன்குமார் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

பாராலிம்பிக்கில் கடின உழைப்பால் கிடைத்த வெள்ளி ! - பிரவீன்குமாரை பாராட்டிய பிரதமர் மோடி!

ThangaveluBy : Thangavelu

  |  3 Sep 2021 5:58 AM GMT

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடந்த உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் பிரவீன்குமார் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

பிரிட்டன் வீரருடன் கடும் போட்டிய நிலவிய நிலையில், 2.07 மீட்டர் உயரம் தாண்டி பிரவீன்குமார் வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார். இவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து செய்தி கூறியிருப்பதாவது: பாராலிம்பிக் போட்டியில் பிரவீன்குமார் வெள்ளிப்பதக்கம் வென்றிருப்பது பெருமை அளிக்கிறது. இந்த பதக்கம் அவரது கடின உழைப்பு மற்றும் ஈடு இணையற்ற அர்ப்பணிப்பிற்கு கிடைத்தவை. அவருக்கு எனது வாழ்த்துகள். அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Pm Modi Twiter Page

Next Story
கதிர் தொகுப்பு
Trending News