Kathir News
Begin typing your search above and press return to search.

கோடிக்கணக்கான மக்களின் அன்பும் ஆசியும் உங்களுக்கு துணை நிற்கும்.. ஒலிம்பிக் வீரர், வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி பேச்சு.!

ஜப்பான் தலைநகர் டோக்கியோ நகரில் வருகின்ற ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளது.

கோடிக்கணக்கான மக்களின் அன்பும் ஆசியும் உங்களுக்கு துணை நிற்கும்.. ஒலிம்பிக் வீரர், வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி பேச்சு.!

ThangaveluBy : Thangavelu

  |  14 July 2021 2:17 AM GMT

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய வீரர், வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலா கலந்துரையாடினார். போட்டிகளில் வெற்றிபெறுவதற்கு அவர்கள் அனைவரும் பிரதமர் மோடி வாழ்த்து கூறினார்.


ஜப்பான் தலைநகர் டோக்கியோ நகரில் வருகின்ற ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளது.

இந்த போட்டியில் பங்கேற்க டோக்கியோ செல்ல உள்ள இந்திய வீரர், வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக நேற்று கலந்துரையாடினார். புதிய இந்தியாவில் நம்பிக்கை நட்சத்திரங்கள் என வாழ்த்தியுள்ள பிரதமர், நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்களின் அன்பும், ஆசியும் வாழ்த்துக்களும் உங்களுக்குத் துணை நிற்கும் எனக் கூறினார்.


ஒலிம்பிக் செல்லும் 126 வீரர், வீராங்கனைகளின் சார்பில் தேர்வு செய்யப்பட்டிருந்த 15 பேருடம் பிரதமர் காணொலி வாயிலாக கலந்துரையாடினார். இதில் சானியா மிர்சா, மேரி கோம், பி.வி.சிந்து மாணிக்கா பாத்ரா, விக்னேஷ் போகத், தத்தி சந்த், தீபிகா குமாரி, இளவேனில் வாலறிவன் உள்ளிட்ட பலர் இந்த காணொலியில் பங்கேற்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News