மீண்டும் மீண்டும் வாய்ப்பு வழங்கும் பிசிசிஐ, மீண்டும் மீண்டும் சொதப்பும் பிரித்திவ் ஷா.!
மீண்டும் மீண்டும் வாய்ப்பு வழங்கும் பிசிசிஐ, மீண்டும் மீண்டும் சொதப்பும் பிரித்திவ் ஷா.!
By : Pravin kumar
ஆஸ்திரேலிய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தற்போது நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இன்று துவங்கி விளையாடி வருகிறது.
இன்று காலை 8:30 மணிக்கு அடிலெய்டு மைதானத்தில் துவங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட்கோலி பகல் இரவு டெஸ்ட் போட்டி என்பதால் முதலில் பேட்டிங் செய்தால் மைதானம் சாதகமாக அமையும் என்று பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி தற்போது இந்திய அணி முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது. துவக்கம் முதலே ஆஸ்திரேலிய வீரர்களின் அதிவேக பந்துவீச்சு மற்றும் ஸ்விங் மூலம் இந்திய வீரர்களை ரன் குவிக்க முடியாமல் திணற வைத்து வருகின்றனர். குறிப்பாக தற்போது உணவு இடைவேளை வரை 25 ஓவர்கள் வீசி 41 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளது.
ஓவருக்கு 2 ரன்கள் அடித்து இருந்தால் கூட 25 ஓவர்கள் முடிவில் 50 ரன்களை அடித்து இருக்க வேண்டும். ஆனல் இந்திய அணி 25 ஓவர் முடிவில் 41 ரன்களை குவித்து உள்ளதால் ஓவருக்கு 2 ரன்க்கும் குறைவாக ரன்ரேட் சென்று கொண்டிருக்கிறது.
இந்திய அணியின் துவக்க வீரராக களம் இறங்கிய பிரித்திவ் ஷா பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வழக்கம் போல் டக்அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.
பிரித்திவ் ஷா இந்த போட்டிக்கு முன்னர் பலராலும் வீவாதிக்கப்பட்ட வீரர் அவருக்கு பதிலாக சுக்மன் கில்லை களம் இறக்க வேண்டும் என பலரும் கூறிவந்த நிலையில் இந்திய அணியின் நீர்வாகம் வழக்கம் போல் பிரித்திவ் ஷா தேர்வு செய்தது. அடுத்த போட்டியில் நிச்சயம் சுக்மன் கில் களம் இறக்கப்படுவார் என எதிர்பார்க்க படுகிறது.